search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அம்பத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை
    X

    அம்பத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை

    அம்பத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அம்பத்தூர்:

    அம்பத்தூர் கிழக்கு பாலாஜி நகரை சேர்ந்தவர் ரமேஷ். தனியார் கம்பெனி ஊழியர். இவர் நேற்று இரவு வேலைக்கு சென்று விட்டார். இவருடைய மனைவி அருகில் உள்ள அவருடைய தாயார் வீட்டில் தூங்கினார்.

    இன்று காலை ரமேஷ் வீடு திரும்பினார். அப்போது முன்கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டின் உள்ளே இருந்த பீரோவும் திறந்து கிடந்தது. அதில் இருந்த 15 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

    இது குறித்து அம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×