search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூர் பள்ளி கல்லூரிகளில் கொள்ளையடித்த முகமூடி கொள்ளையர்கள் 3 பேர் கைது
    X

    வேலூர் பள்ளி கல்லூரிகளில் கொள்ளையடித்த முகமூடி கொள்ளையர்கள் 3 பேர் கைது

    வேலூர் பள்ளி கல்லூரிகளில் கொள்ளையடித்த முகமூடி கொள்ளையர்கள் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செய்யாறு:

    செய்யாறு டவுன் ஆரணி கூட்ரோடு பகுதியில் செய்யாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதாகர் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது ஆற்காடு பகுதியிலிருந்து செய்யாறு நோக்கி மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். அவர்கள் மீது சந்தேகம் அடைந்த போலீசார் மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையிட்டனர்.

    விசாரணையில் அவர்கள் முரண்பட்ட தகவல்களை அளித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர். அங்கு நடத்திய விசாரணையில் அவர்கள் வேலூர் மாவட்டம், பனங்காட்டேரி கிராமத்தை சேர்ந்த திருப்பதி (வயது25), கொத்தம்பள்ளி கிராமத்தை சேர்ந்த கணேசன் (28), ஆம்பூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் (25) என்பது தெரியவந்தது.

    இவர்கள் கூட்டாக சேர்ந்து செய்யாறு பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 7-ந்தேதி ஆற்காடு சாலையில் உள்ள தனியார் பள்ளியிலும், அக்டோபர் மாதம் 27-ந்தேதி பாராசூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியிலும் முகமூடி அணிந்து வந்து காவலரை தாக்கி அலுவலகத்தில் இருந்து ரூ.1 லட்சத்து 90 ஆயிரத்தினை கொள்ளையடித்துள்ளனர்.

    பின்னர் தங்களை அடையாளம் கண்டுகொள்வதை தவிர்க்க கண்காணிப்பு கேமராகளை உடைத்தும், கேமிரா காட்சிகள் பதிவாகும் கருவியையும் எடுத்துகொண்டு சென்றது தெரிய வந்ததுள்ளது.

    இதே போல வேலூர், திருவள்ளூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 3 மாவட்டங்களில் 10-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி மற்றும் கல்லூரியில் கொள்ளை அடித்ததை ஒப்புக்கொண்டனர்.

    இதையடுத்து திருப்பதி, கணேசன் மற்றும் ரமேஷ் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.38 ஆயிரத்தையும், ஒரு மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரையும் செய்யாறு கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள முகமூடி கொள்ளையர்கள் 4 பேரையும் செய்யாறு போலீசார் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×