என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திண்டுக்கல் அருகே வீடு புகுந்து நகை கொள்ளை
Byமாலை மலர்23 Nov 2018 9:51 AM GMT (Updated: 23 Nov 2018 9:51 AM GMT)
திண்டுக்கல் அருகே வீடு புகுந்து நகை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகே சாணார்பட்டி பஞ்சம்பட்டியைச் சேர்ந்தவர் முத்து கருப்பையா. இவரது மனைவி பாக்கியலெட்சுமி. இருவரும் கூலித் தொழிலாளர்கள். சம்பவத்தன்று 2 பேரும் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டனர்.
முத்து கருப்பையாவின் சகோதரி வீட்டுக்கு வந்து பார்த்த போது பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்து அவருக்கு தகவல் தெரிவித்தார். முத்து கருப்பையா விரைந்து வந்து பார்த்தபோது வீட்டில் பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. மேலும் பீரோவும் உடைக்கப்பட்டு இருந்தது.
பீரோவில் இருந்த 9½ பவுன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது தெரிய வந்தது. இது குறித்து சாணார்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் டி.எஸ்.பி. சீனியம்மாள் தலைமையில் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தில் தடயங்களை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் அருகே சாணார்பட்டி பஞ்சம்பட்டியைச் சேர்ந்தவர் முத்து கருப்பையா. இவரது மனைவி பாக்கியலெட்சுமி. இருவரும் கூலித் தொழிலாளர்கள். சம்பவத்தன்று 2 பேரும் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டனர்.
முத்து கருப்பையாவின் சகோதரி வீட்டுக்கு வந்து பார்த்த போது பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்து அவருக்கு தகவல் தெரிவித்தார். முத்து கருப்பையா விரைந்து வந்து பார்த்தபோது வீட்டில் பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. மேலும் பீரோவும் உடைக்கப்பட்டு இருந்தது.
பீரோவில் இருந்த 9½ பவுன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது தெரிய வந்தது. இது குறித்து சாணார்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் டி.எஸ்.பி. சீனியம்மாள் தலைமையில் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தில் தடயங்களை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X