search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வடமதுரை போலீஸ் நிலையத்தில் கல்லூரி மாணவியுடன் தஞ்சம் அடைந்த ஆட்டோ டிரைவர்
    X

    வடமதுரை போலீஸ் நிலையத்தில் கல்லூரி மாணவியுடன் தஞ்சம் அடைந்த ஆட்டோ டிரைவர்

    கல்லூரி மாணவியை திருமணம் செய்து ஆட்டோ டிரைவர் பாதுகாப்பு கேட்டு வடமதுரை போலீசில் தஞ்சமடைந்தார்.

    வடமதுரை:

    வடமதுரை அருகே உள்ள பெரியகோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் தங்க கருப்பையா (வயது 22). டிப்ளமோ முடித்துள்ள இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். வடமதுரை அருகே உள்ள குளத்தூரைச் சேர்ந்தவர் பரமேஸ்வரி (20). பெற்றோரை இழந்த இவர் தனது தாத்தா பராமரிப்பில் இருந்து வந்தார். பி.எட். படித்து வந்த பரமேஸ்வரி கல்லூரிக்கு செல்லும் போது தங்க கருப்பையாவுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.

    இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதனால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

    பின்னர் பாதுகாப்பு கேட்டு வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். போலீசார் இருவரது குடும்பத்தினரையும் வரவழைத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×