என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அயனாவரம் அருகே பியூட்டி பார்லருக்கு சென்ற மணப்பெண் மாயம்
Byமாலை மலர்20 Nov 2018 9:10 AM GMT (Updated: 20 Nov 2018 9:10 AM GMT)
அயனாவரம் அருகே பியூட்டி பார்லருக்கு சென்ற மணப்பெண் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அம்பத்தூர்:
அயனாவரம் பழனியாண்டவர் கோவில் தெருவை சேர்ந்தவர் லூர்துசாமி. இவரது மகள் ஜான்சிராணி (23). புரசைவாக்கத்தில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை பார்த்து வந்தார். இவரும், அயனாவரத்தை சேர்ந்த ஜோஸ்வாவும் காதலித்து வந்தனர்.
இரு வீட்டார் சம்மதத்துடன் நிச்சயிக்கப்பட்டு நேற்று மாலை ஐ.சி.எப்.பில் உள்ள தேவாலயத்தில் திருமணம் நடக்க இருந்தது. இந்த நிலையில் நேற்று மதியம் ஜான்சிராணி பியூட்டி பார்லருக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து அயனாவரம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X