search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் நடைபெறும் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்பு
    X

    டெல்லியில் நடைபெறும் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்பு

    டெல்லியில் விரைவில் நடைபெறவுள்ள எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #ChandrababuNaidu #Stalin
    சென்னை:

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து மிகப்பெரிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் சந்திரபாபு நாயுடு ஈடுபட்டுள்ளார்.

    அதன்படி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக்அப்துல்லா, சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ் ஆகியோரையும் சந்தித்தார். தொடர்ந்து பல்வேறு மாநிலங்களுக்கு சென்று முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார்.

    இந்நிலையில், சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலினை ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு இன்று மாலை சந்தித்து பேசினார். அப்போது, இருவரும் சேர்ந்து செய்தியாளர்களுக்கு கூட்டாக அளித்த பேட்டி:



    மத்தியில் உள்ள பாஜக ஆட்சியை வீழ்த்தும் முயற்சியில் சந்திரபாபு நாயுடு மேற்கொண்டு வரும் நடவடிக்கையை வரவேற்று திமுக சார்பில் ஏற்கனவே அறிக்கை விடுத்திருக்கிறேன்.

    பிரதமர் மோடி ஆட்சியில் மாநிலங்களின் உரிமை பறிக்கப்பட்டு வருகிறது. சி.பி.ஐ., ஆர்.பி.ஐ. உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை.

    டெல்லியில் விரைவில் நடைபெறவுள்ள எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். அந்த கூட்டத்தில் கலந்து கொள்வதாக தெரிவித்துள்ளேன்.

    மேலும், தேசிய அளவிலான கூட்டணிக்கு திமுக ஆதரவு அளிக்கும் என ஸ்டாலின் தெரிவித்தார். #ChandrababuNaidu #Stalin
    Next Story
    ×