என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கும்மிடிப்பூண்டி அருகே வியாபாரி வீட்டில் நகை-பணம் கொள்ளை
Byமாலை மலர்8 Nov 2018 8:08 AM GMT (Updated: 8 Nov 2018 8:08 AM GMT)
கும்மிடிப்பூண்டி அருகே பழவியாபாரி வீட்டு கதவின் தாழ்ப்பாளை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டியை அடுத்த தம்புரெட்டிபாளையம் கிராமத்தைச்சேர்ந்தவர் செல்வமணி. இவர்சென்னை திருவெற்றியூரில் பழவியாபாரம் செய்து வருகிறார். இவரது வீட்டில் 2 தனி அறைகளில் மகன்கள் பிரசாந்த் மற்றும் நவீன் ஆகியோர் தனித்தனியே குடும்பத்தோடு வசித்து வருகின்றனர்.
கடந்த 6-ந்தேதி பழ வியாபாரத்திற்கு சென்ற செல்வமணி, சென்னையிலேயே தங்கி விட்டார். சிப்காட் அடுத்து முத்து ரெட்டிகண்டிகை கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு மகன்கள் மற்றும் குடும்பத்துடன் சென்று விட்டனர்.
இந்த நிலையில் நேற்று மாலை பிரசாந்த் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டு கதவின் தாழ்ப்பாள் கடப்பாரை கொண்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. 3 பீரோக்களில் இருந்த 14 பவுன் நகை, ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரொக்கப்பணம் ரூ. 45 ஆயிரம் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் அள்ளிச் சென்றிருப்பது தெரியவந்தது.
இது குறித்து இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டியை அடுத்த தம்புரெட்டிபாளையம் கிராமத்தைச்சேர்ந்தவர் செல்வமணி. இவர்சென்னை திருவெற்றியூரில் பழவியாபாரம் செய்து வருகிறார். இவரது வீட்டில் 2 தனி அறைகளில் மகன்கள் பிரசாந்த் மற்றும் நவீன் ஆகியோர் தனித்தனியே குடும்பத்தோடு வசித்து வருகின்றனர்.
கடந்த 6-ந்தேதி பழ வியாபாரத்திற்கு சென்ற செல்வமணி, சென்னையிலேயே தங்கி விட்டார். சிப்காட் அடுத்து முத்து ரெட்டிகண்டிகை கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு மகன்கள் மற்றும் குடும்பத்துடன் சென்று விட்டனர்.
இந்த நிலையில் நேற்று மாலை பிரசாந்த் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டு கதவின் தாழ்ப்பாள் கடப்பாரை கொண்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. 3 பீரோக்களில் இருந்த 14 பவுன் நகை, ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரொக்கப்பணம் ரூ. 45 ஆயிரம் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் அள்ளிச் சென்றிருப்பது தெரியவந்தது.
இது குறித்து இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X