search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆந்திராவில் இருந்து ஊத்துக்கோட்டைக்கு மோட்டார் சைக்கிளில் குட்கா கடத்திய வாலிபர் கைது
    X

    ஆந்திராவில் இருந்து ஊத்துக்கோட்டைக்கு மோட்டார் சைக்கிளில் குட்கா கடத்திய வாலிபர் கைது

    ஆந்திராவில் இருந்து ஊத்துக்கோட்டை வழியாக மோட்டார் சைக்கிளில் தடை செய்யப்பட்ட குட்கா கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து புழல் ஜெயிலில் அடைத்தனர்.

    ஊத்துக்கோட்டை:

    ஆந்திராவில் இருந்து ஊத்துக்கோட்டை வழியாக சிலர் தடைசெய்யப்பட்ட குட்கா பெருட்களை கடத்து வதாக துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசனுக்கு தகவல் கிடைத்தது.

    அவரது உத்தரவின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் நித்தியானந்தம் நகர எல்லையில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது மோட்டார் சைக்கிளில் வடநாட்டு வாலிபர் ஒருவர் வேகமாக வந்தார். அவரை நிறுத்தி சீட்டின் பின்புறம் இருந்த மூட்டையில் சோதனை செய்தபோது ரூ. 25 ஆயிரம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா இருந்தது. மோட்டார் சைக்கிளுடன் குட்காவை பறிமுதல் செய்தனர்.

    மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வாலிபர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சர்தாராம் (வயது 22) என்று தெரியவந்தது.

    ஊத்துக்கோட்டை நேரு பஜாரில் கடை ஒன்றை வாடகைக்கு எடுத்து ஆந்திராவிருந்து கடத்தி வரப்படும் குட்கா பொருட்களை சேமித்து வைத்து சென்னை கொண்டு சென்று விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அவரை கைது செய்து ஊத்துக்கோட்டை கோர்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×