என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஆந்திராவில் இருந்து ஊத்துக்கோட்டைக்கு மோட்டார் சைக்கிளில் குட்கா கடத்திய வாலிபர் கைது
ஊத்துக்கோட்டை:
ஆந்திராவில் இருந்து ஊத்துக்கோட்டை வழியாக சிலர் தடைசெய்யப்பட்ட குட்கா பெருட்களை கடத்து வதாக துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசனுக்கு தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் நித்தியானந்தம் நகர எல்லையில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது மோட்டார் சைக்கிளில் வடநாட்டு வாலிபர் ஒருவர் வேகமாக வந்தார். அவரை நிறுத்தி சீட்டின் பின்புறம் இருந்த மூட்டையில் சோதனை செய்தபோது ரூ. 25 ஆயிரம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா இருந்தது. மோட்டார் சைக்கிளுடன் குட்காவை பறிமுதல் செய்தனர்.
மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வாலிபர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சர்தாராம் (வயது 22) என்று தெரியவந்தது.
ஊத்துக்கோட்டை நேரு பஜாரில் கடை ஒன்றை வாடகைக்கு எடுத்து ஆந்திராவிருந்து கடத்தி வரப்படும் குட்கா பொருட்களை சேமித்து வைத்து சென்னை கொண்டு சென்று விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அவரை கைது செய்து ஊத்துக்கோட்டை கோர்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்