search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை அருகே பழைய பொருட்கள் குடோனில் தீ விபத்து
    X

    கோவை அருகே பழைய பொருட்கள் குடோனில் தீ விபத்து

    கோவை அருகே பழைய பொருட்கள் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கவுண்டம்பாளையம்:

    கோவை வடவள்ளியை சேர்ந்தவர் மதன்லால். இவர் இடையர் பாளையம் அருகே உள்ள ஒரு குடோனில் பழைய பொருட்களை சேர்த்து வைத்து இருந்தார்.

    இந்த குடோனில் இன்று காலை 9.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மளமளவென்று பரவ தொடங்கியது. குடோனில் கழிவு பிளாஸ்டிக் பொருட்களும் இருந்ததால் பெரும் கரும் புகை உருவானது.

    குடோன் அருகே மரக்கடைகள் உள்ளதால் அக்கடைகளுக்கு தீ பரவும் நிலை ஏற்பட்டது. தீ விபத்து குறித்து அப்பகுதி பொதுமக்கள் கவுண்டம்பாளையத்தில் உள்ள வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தான் தீயை அணைக்க முடிந்தது.

    தீப்பிடித்த பழைய பொருட்கள் குடோன் அருகில் குப்பைகள் அதிக அளவு தேங்கி கிடந்தது. அதற்கு யாரோ தீ வைத்த போது அந்த தீ குடோனுக்கும் பரவி இருக்கலாம் என தெரிகிறது.

    சேத மதிப்பு கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×