search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவையில் வேலை பார்த்த ஜவுளிக்கடையில் ரூ.5 லட்சம் திருடிய காசாளர் கைது
    X

    கோவையில் வேலை பார்த்த ஜவுளிக்கடையில் ரூ.5 லட்சம் திருடிய காசாளர் கைது

    கோவையில் பிரபல ஜவுளிக்கடையில் ரூ.5 லட்சத்தை திருடிய காசாளரை போலீசார் கைது செய்தனர்.
    கோவை:

    கோவை ஒப்பணக்கார வீதியில் இயங்கி வரும் பிரபல ஜவுளிக்கடையில் தேனியை சேர்ந்த பாண்டியராஜ் (வயது30) என்பவர் வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 1½ வருடங்களாக கடையில் வேலைபார்த்து வரும் இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காசாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

    சம்பவத்தன்று இவர் 4-வது மாடியில் பணியில் இருந்த போது ரூ. 4 லட்சத்து 98 ஆயிரத்தை திருடி உள்ளார். கடைஅதிகாரிகள் கணக்கை சரிபார்த்த போது பணம் திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது. மேலும் பாண்டியராஜையும் காணவில்லை.

    இதுகுறித்து கடை மேலாளர் சிவகுமார் பெரியகடை வீதி குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டியராஜை கைது செய்தனர். அவரிடம் இருந்து திருட்டுபணம் முழுவதையும் பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×