என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
செம்பட்டி அருகே சாலை விபத்துகளில் 3 பேர் பலி
ஆத்தூர்:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள பூசாரிப்பட்டியைச் சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 40). சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவர் தனது நண்பர் குமார் (வயது 40) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் செம்பட்டி அருகே உள்ள வீரசிக்கம்பட்டி பிரிவு அருகே சென்று கொண்டு இருந்தார்.
அப்போது எதிரே வந்த அரசு பஸ் அவர்கள் மீது பயங்கரமாக மோதியது. படுகாயமடைந்த 2 பேரும் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு கொண்டு வரப்பட்டனர். ஆனால் வரும் வழியிலேயே பாலமுருகன் பரிதாபமாக உயிரிழந்தார். குமார் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தார். இது குறித்து செம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆத்தூர் ஒன்றியம் சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் செல்லமாயி (வயது 58). இவர் தள்ளுவண்டியில் காய்கறி, வெள்ளைப்பூண்டு வியாபாரம் செய்து வந்தார். சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் செம்பட்டி அருகே வந்து கொண்டு இருந்தார்.
பாளையங்கோட்டையில் எதிரே வந்த வாகனம் மோதியதில் படுகாயமடைந்தார். திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தார். செம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதிகா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்