search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆண்டிப்பட்டி அருகே 7 மாத கர்ப்பிணி மர்ம மரணம்
    X

    ஆண்டிப்பட்டி அருகே 7 மாத கர்ப்பிணி மர்ம மரணம்

    ஆண்டிப்பட்டி அருகே மர்மமான முறையில் இறந்த 7 மாத கர்ப்பிணி குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகே கொண்டமநாயக்கன்பட்டி காலனியைச் சேர்ந்தவர் பாண்டியராஜன் (வயது 29). இவருக்கும் லெட்சுமிபுரம் காலனியைச் சேர்ந்த நந்தினி (வயது 19) என்ற பெண்ணுக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. நந்தினி தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

    பாண்டியராஜன் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் அடிக்கடி குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் நந்தினி கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விடுவார், அக்கம் பக்கத்தினர் சமரசம் செய்து வைத்தும் பிரச்சினை தொடர்ந்து கொண்டே இருந்தது. பாண்டியராஜன் குடிப்பழக்கத்தை விடாததால் நந்தினி மன உளைச்சலில் இருந்துள்ளார்.

    நேற்று இரவு நந்தினியின் தாய் குமுதாவிடம் தங்கள் மகள் தூக்குபோட்டு இறந்து விட்டார் என பாண்டியராஜன் தரப்பினர் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த குமுதா விரைந்து வந்து பார்த்தபோது மகள் பிணமாக கிடப்பதை கண்டு கதறி அழுதார்.

    இது குறித்து ஆண்டிப்பட்டி போலீசில் அளித்த புகாரில் கூறியதாவது:- பாண்டியராஜன் தரப்பினர் அடிக்கடி வரதட்சணை கேட்டு எனது மகளை துன்புறுத்தினர். இன்று தற்கொலை செய்து கொண்டதாக தகவல் தெரிவித்தனர். ஆனால் நந்தியின் சாவில் மர்மம் இருக்கிறது. எனவே இது குறித்து விசாரிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    இது குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் பாண்டிய ராஜன் உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து நந்தினி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 8 மாதங்களே ஆவதால் ஆர்.டி.ஓ. மேல் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×