search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆலங்குடி அருகே மதுபாட்டில் கடத்திய வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
    X

    ஆலங்குடி அருகே மதுபாட்டில் கடத்திய வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

    ஆலங்குடி அருகே மதுபாட்டில் கடத்திய வாலிபரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
    ஆலங்குடி:

    ஆலங்குடி அருகே உள்ள பரவாக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 33). இவர் மீது புதுச்சேரியில் இருந்து மதுபானங்கள் கடத்தி வந்தது உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. 

    இதையடுத்து குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், கலெக்டர் கணேசுக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் கணேஷ் உத்தரவிட்டார். 

    இதையடுத்து ஏற்கனே சிறையில் உள்ள குமாரிடம் அவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான ஆணையின் நகலை ஆலங்குடி போலீசார் வழங்கினர்.
    Next Story
    ×