search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயங்கொண்டத்தில் அதிமுக 47-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம்
    X

    ஜெயங்கொண்டத்தில் அதிமுக 47-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம்

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் அ.தி.மு.க.வின் 47ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நகர கழக செயலாளர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்திபூங்கா அருகில் உள்ள தேவாங்க நடுத்தெருவில் அ.தி.மு.க.வின் 47ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நகர கழக செயலாளர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. திருச்சி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க துணைத்தலைவரும், மாவட்ட துணை செயலாளருமான  தங்கபிச்சமுத்து, மாநில இளைஞரணி துணை தலைவர் அறிவு (எ) சிவசுப்பிர மணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர அவைத்தலைவர் முருகேசன் வரவேற்றார். மாவட்ட கழகச் செயலாளரும், அரசு தலைமை கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன் மற்றும் ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ ராமஜெயலிங்கம், பெரம்பலூர் எம்.பி. மருதை ராஜா உள்ளிட்டோர் கலந்து  கொண்டு சிறப்புரையாற்றினர்.

    நிகழ்ச்சிக்கு ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் கல்யாணசுந்தரம், மாவட்ட அம்மா பேரவை தண்டபாணி, எம்.ஜி.ஆர் மன்றம் மகாபாரிவள்ளல் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர். முடிவில் நகர கழக பொருளாளர் அன்பழகன் நன்றி கூறினார். #ADMK
    Next Story
    ×