என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜெயங்கொண்டத்தில் அதிமுக 47-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம்
Byமாலை மலர்23 Oct 2018 2:44 PM GMT (Updated: 23 Oct 2018 2:44 PM GMT)
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் அ.தி.மு.க.வின் 47ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நகர கழக செயலாளர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்திபூங்கா அருகில் உள்ள தேவாங்க நடுத்தெருவில் அ.தி.மு.க.வின் 47ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நகர கழக செயலாளர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. திருச்சி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க துணைத்தலைவரும், மாவட்ட துணை செயலாளருமான தங்கபிச்சமுத்து, மாநில இளைஞரணி துணை தலைவர் அறிவு (எ) சிவசுப்பிர மணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர அவைத்தலைவர் முருகேசன் வரவேற்றார். மாவட்ட கழகச் செயலாளரும், அரசு தலைமை கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன் மற்றும் ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ ராமஜெயலிங்கம், பெரம்பலூர் எம்.பி. மருதை ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
நிகழ்ச்சிக்கு ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் கல்யாணசுந்தரம், மாவட்ட அம்மா பேரவை தண்டபாணி, எம்.ஜி.ஆர் மன்றம் மகாபாரிவள்ளல் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர். முடிவில் நகர கழக பொருளாளர் அன்பழகன் நன்றி கூறினார். #ADMK
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்திபூங்கா அருகில் உள்ள தேவாங்க நடுத்தெருவில் அ.தி.மு.க.வின் 47ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நகர கழக செயலாளர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. திருச்சி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க துணைத்தலைவரும், மாவட்ட துணை செயலாளருமான தங்கபிச்சமுத்து, மாநில இளைஞரணி துணை தலைவர் அறிவு (எ) சிவசுப்பிர மணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர அவைத்தலைவர் முருகேசன் வரவேற்றார். மாவட்ட கழகச் செயலாளரும், அரசு தலைமை கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன் மற்றும் ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ ராமஜெயலிங்கம், பெரம்பலூர் எம்.பி. மருதை ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
நிகழ்ச்சிக்கு ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் கல்யாணசுந்தரம், மாவட்ட அம்மா பேரவை தண்டபாணி, எம்.ஜி.ஆர் மன்றம் மகாபாரிவள்ளல் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர். முடிவில் நகர கழக பொருளாளர் அன்பழகன் நன்றி கூறினார். #ADMK
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X