search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தி.நகர்-பாரிமுனை-வண்ணாரப்பேட்டையில் தீபாவளி திருடர்களை பிடிக்க 2500 கண்காணிப்பு கேமராக்கள்
    X

    தி.நகர்-பாரிமுனை-வண்ணாரப்பேட்டையில் தீபாவளி திருடர்களை பிடிக்க 2500 கண்காணிப்பு கேமராக்கள்

    தி.நகர்-பாரிமுனை-வண்ணாரப்பேட்டையில் தீபாவளி திருடர்களை பிடிக்க 2500 கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன.

    சென்னை:

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 வாரங்களே இருக்கும் நிலையில் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் இப்போதே தொடங்கியுள்ளனர்.

    அடுத்த மாதம் 6-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதால் இந்த வார இறுதியிலேயே புத்தாடை மற்றும் பொருட்களை வாங்குவதற்கு பொது மக்கள் அலை மோதுவார்கள்.

    குறிப்பாக வருகிற 2 மற்றும் 3-ந்தேதிகளில் தி.நகர், பாரிமுனை, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இதனை கருத்தில் கொண்டு போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    தி.நகரில் ரங்கநாதன் தெரு, உஸ்மான் ரோடு, பாண்டிபஜார், பனகல் பூங்கா உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அதனை கருத்தில் கொண்டு சுமார் 500 போலீசாரை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. துணை கமி‌ஷனர் அரவிந்தன் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் 300 கேமராக்களும் பொறுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணிகளை துரிதப்படுத்துவதற்காக நாளை மறுநாள் கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட உள்ளது. திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர்கள் கூட்டத்துக்குள் புகுந்து விட்டால் அதனை கண்காணித்து காட்டி கொடுக்கும் வகையிலும் ‘‘சிறப்பு சர்வர்’’ ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே இதுபோன்ற நடைமுறைகளை தி.நகரில் போலீசார் பின்பற்றி வருகிறார்கள்.

    வடசென்னை பகுதியிலும் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில் கூடுதல் கமி‌ஷனர் தினகரன், இணை ஆணையர் பிரேமானந்த் சின்கா ஆகியோரது மேற்பார்வையில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. பூக்கடை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 452 கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. இன்னும் 135 கேமராக்கள் பொறுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகள் முடிந்துவிட் டால் பூக்கடை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 100 சதவீதம் கேமரா பொறுத்தும் பணிகள் நிறைவு பெற்றுவிடும்.

    யானைக்கவுனி பகுதியில் 573 கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. ஒரு மாதத்துக்கு முன்பே இதற்கான பணிகள் முடிந்து விட்டன. யானைக் கவுனி போலீஸ் நிலையத்தில் பிரத்யேகமான கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது.

    இதேபோல வண்ணாரப் பேட்டை பகுதியில் 591 கேமராக்களும், தண்டையார்பேட்டை போலீஸ் நிலையத்தில் எல்லைக்குட்பட்ட பகுதியில் 509 கேமராக்களும் ராயபுரம் பகுதியில் 300 கேமராக்களும் பொறுத்தப்பட்டுள்ளன.

    இதன் மூலம் தி.நகர், பாரிமுனை, வண்ணாரப்பேட்டை, ராயபுரம், தண்டையார்பேட்டை உள்ளிட்ட பகுதிகள் அனைத்திலும் சுமார் 2500 கேமராக்கள் மூலமாக போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    வண்ணாரப்பேட்டை எம்.ஜி.ரோடு ஜி.ஏ. ரோடு சந்திப்பில் தற்காலிக போலீஸ் கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.

    Next Story
    ×