search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பழவூர் கோவிலில் சாமி சிலை கொள்ளை வழக்கு - ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் இன்று விசாரணை
    X

    பழவூர் கோவிலில் சாமி சிலை கொள்ளை வழக்கு - ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் இன்று விசாரணை

    நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள பழவூர் கோவிலில் சாமி சிலை கொள்ளை வழக்கு தொடர்பாக ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் இன்று விசாரணை நடத்தினார்.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள பழவூரில் நாறும்பூநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 2005-ம் ஆண்டு 13 ஐம்பொன் சிலைகள் கொள்ளை போனது. இது தொடர்பாக பழவூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    பின்னர் இது தொடர்பான வழக்குகள், சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கொள்ளைபோன சாமி சிலைகளை மீட்டார். இதில் நாறும்பூநாதர் கோவிலுக்கு சொந்தமான 9 சிலைகளும் மீட்கப்பட்டது.

    ஆனால் இந்த ஐம்பொன் சிலைகளில் தங்கத்தின் அளவு குறைவாக உள்ளது. இதனால் அதன் உண்மை தன்மைகள் பற்றி அறிய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் இன்று பழவூருக்கு வந்தார். இதைத்தொடர்ந்து அவர் கோவில் நிர்வாகிகளிடமும், ஊர் முக்கிய பிரமுகர்களிடமும் விசாரணை மேற்கொண்டார்.

    Next Story
    ×