search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உளுந்தூர்பேட்டை அருகே சாலை விபத்து - தனியார் பேருந்து லாரி மோதி 4 பேர் பலி
    X

    உளுந்தூர்பேட்டை அருகே சாலை விபத்து - தனியார் பேருந்து லாரி மோதி 4 பேர் பலி

    உளுந்தூர்பேட்டை அருகே தனியார் பேருந்தும், லாரியும் மோதிய விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Accident
    உளுந்தூர்பேட்டை:

    சென்னையில் இருந்து திருச்சி நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து உளுந்தூர்பேட்டை அருகே வந்தது.

    அஜீஸ் நகர் அருகில் வந்தபோது தனியார் பேருந்து லாரியுடன் உரசியது. இதில் பேறுந்து தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் சிக்கி 4 பேர் பரிதாபமாக பலியாகினர்.

    தகவலறிந்து அங்கு சென்ற மீட்புப்படையினர் தீ விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளில் சேர்த்து உகிச்ச்சை அளித்து வருகின்றனர்.

    இதில் பலரது நிலைமை கவலைக்க்டமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. #Accident
    Next Story
    ×