என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரேஷன் கடைகளில் 1-ந்தேதி முதல் அனைத்து பொருட்களும் கிடைக்கும்: அமைச்சர் காமராஜ் தகவல்
Byமாலை மலர்17 Oct 2018 9:35 AM GMT (Updated: 17 Oct 2018 9:35 AM GMT)
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் 1-ந்தேதி முதல் அனைத்து பொருட்களும் கிடைக்கும் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். #ADMK #TNMinister #Kamaraj #RationShops
திருவாரூர்:
சென்னை கோபாலபுரம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொதுவிநியோகத் திட்ட கிடங்கில் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் இரா.காமராஜ் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில் அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு, பாமாயில் ஆகிய அத்தியாவசியப் பொருள்கள் மாத ஒதுக்கீட்டின்படி நியாய விலை அங்காடிகளுக்கு நகர்வு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்தார்.
அப்போது அனைத்து பொருள்களும் உரிய தரத்துடன், சரியான எடையில் இயக்க பொறுப்பாளர்கள் முன்னிலையில் நகர்வு செய்யப்பட வேண்டுமென கிடங்கு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அங்காடிகளுக்கு அனைத்து அத்தியாவசியப் பொருள்களும், முன்நகர்வு செய்யப்பட்டு நவம்பர் 1-ந்தேதியிலிருந்து குடும்ப அட்டைதாரர்கள் பொருள்களை பெற்றுக் கொள்வதற்கு ஏதுவாக, கையிருப்பு வைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
அமுதம் நியாய விலை அங்காடிகளை ஆய்வு செய்த அமைச்சர் குடும்ப அட்டை தாரர்களுக்கு சரியான எடையில் பொருட்கள் வழங்கப்படுவதை உறுதி செய்தார். கோபாலபுரம் அமுதம் பல்பொருள் சிறப்பங்காடியில் ஆய்வு மேற்கொண்டு பொது மக்களுக்கு தரமான அரிசி, அனைத்து மளிகைப் பொருள்கள், அத்தியாவசியப் பொருள்கள் குறைவான விலையில் விற்பனை செய்யப்படுகின்றன என்றும் தெரிவித்தார்.
மழை காலங்களில் கிடங்குகள் மற்றும் நியாய விலை அங்காடிகளில் அத்தியாவசியப் பொருள்கள் பாதுகாப்பாக பராமரிக்கப்பட வேண்டும், தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகாமல் தடுப்பு நடவடிக்கைகளை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் எம்.சுதாதேவி, உணவுப்பொருள் வழங்கல் துறை ஆணையாளர் சோ.மதுமதி மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர். #ADMK #TNMinister #Kamaraj #RationShops
சென்னை கோபாலபுரம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொதுவிநியோகத் திட்ட கிடங்கில் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் இரா.காமராஜ் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில் அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு, பாமாயில் ஆகிய அத்தியாவசியப் பொருள்கள் மாத ஒதுக்கீட்டின்படி நியாய விலை அங்காடிகளுக்கு நகர்வு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்தார்.
அப்போது அனைத்து பொருள்களும் உரிய தரத்துடன், சரியான எடையில் இயக்க பொறுப்பாளர்கள் முன்னிலையில் நகர்வு செய்யப்பட வேண்டுமென கிடங்கு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அங்காடிகளுக்கு அனைத்து அத்தியாவசியப் பொருள்களும், முன்நகர்வு செய்யப்பட்டு நவம்பர் 1-ந்தேதியிலிருந்து குடும்ப அட்டைதாரர்கள் பொருள்களை பெற்றுக் கொள்வதற்கு ஏதுவாக, கையிருப்பு வைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
அமுதம் நியாய விலை அங்காடிகளை ஆய்வு செய்த அமைச்சர் குடும்ப அட்டை தாரர்களுக்கு சரியான எடையில் பொருட்கள் வழங்கப்படுவதை உறுதி செய்தார். கோபாலபுரம் அமுதம் பல்பொருள் சிறப்பங்காடியில் ஆய்வு மேற்கொண்டு பொது மக்களுக்கு தரமான அரிசி, அனைத்து மளிகைப் பொருள்கள், அத்தியாவசியப் பொருள்கள் குறைவான விலையில் விற்பனை செய்யப்படுகின்றன என்றும் தெரிவித்தார்.
மழை காலங்களில் கிடங்குகள் மற்றும் நியாய விலை அங்காடிகளில் அத்தியாவசியப் பொருள்கள் பாதுகாப்பாக பராமரிக்கப்பட வேண்டும், தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகாமல் தடுப்பு நடவடிக்கைகளை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் எம்.சுதாதேவி, உணவுப்பொருள் வழங்கல் துறை ஆணையாளர் சோ.மதுமதி மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர். #ADMK #TNMinister #Kamaraj #RationShops
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X