search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தண்டையார்பேட்டையில் மாடியில் இருந்து விழுந்து மாணவன் பலி
    X

    தண்டையார்பேட்டையில் மாடியில் இருந்து விழுந்து மாணவன் பலி

    தண்டையார்பேட்டையில் மாடியில் இருந்து விழுந்து மாணவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராயபுரம்:

    சென்னை தண்டையார்பேட்டை கப்பல் போலு தெருவை சேர்ந்தவர் மதியழகன். இவரது மகன் சோமசேகர் (வயது 14). 8-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மாலை வீட்டு மாடியில் நின்று கொண்டிருந்த சோமசேகர் திடீரென்று தவறி கீழே விழுந்தான். இதில் பலத்த காயம் அடைந்த அவனை சென்னை ஸ்டான்லி மருத்துவ மனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவன் பரிதாபமாக இறந்தான்.

    இதுகுறித்து தண்டையார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×