search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜாமினில் வெளிவந்து தலைமறைவான ரவுடி பினு கும்மிடிப்பூண்டியில் கைது
    X

    ஜாமினில் வெளிவந்து தலைமறைவான ரவுடி பினு கும்மிடிப்பூண்டியில் கைது

    நிபந்தனை ஜாமினில் வெளிவந்து தலைமறைவான ரவுடி பினுவை கும்மிடிப்பூண்டியில் போலீசார் இன்று கைது செய்துள்ளனர். #Binu #RowdiBinu
    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வலம்வந்த பிரபல ரவுடி பினு கடந்த சில வருடங்களாக தலைமறைவாக இருந்துவந்தார். கடந்த பிப்ரவரி மாதம் பினுவின் பிறந்தநாளை கொண்டாட அவரது தம்பி மாங்காடு அடுத்த மலையம்பாக்கம் பகுதியில் மிகப்பெரிய கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
     
    இந்த கொண்டாட்டத்தில் நகரத்தின் முக்கிய ரவுடிகள் பலர் பங்கேற்றனர். தகவலறிந்த காவல்துறை அதிரடியாக அங்கு சென்று ரவுடிகளை கைது செய்தனர்.

    ஆனால் அங்கிருந்து பினு உள்ளிட்ட சிலர் மட்டும் தப்பிச் சென்றார். பின்னர் அவர் தாமாக வந்து சரணடைந்தார். பிப்ரவரி 23-ம் தேதி ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றம் ரவுடி பினுவுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது. இதற்கிடையே, ஜாமினில் வெளியான நாளில் இருந்தே பினு மாங்காடு காவல் நிலையத்தில் கையெழுத்திடாமல் தலைமறைவாகி விட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், நிபந்தனை ஜாமினில் வெளிவந்து தலைமறைவான பிரபல ரவுடி பினு கும்மிடிப்பூண்டியில் கைது செய்யப்பட்டார் 

    இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமின் பெற்று தலைமறைவான ரவுடி பினு, திருவள்ளூர் மாவட்டம் பாதிரிவேடு பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளனர். #Binu #RowdiBinu
    Next Story
    ×