search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அவனியாபுரத்தில் அடிப்படை வசதிகள் கேட்டு பெண்கள் சாலை மறியல்
    X

    அவனியாபுரத்தில் அடிப்படை வசதிகள் கேட்டு பெண்கள் சாலை மறியல்

    அவனியாபுரத்தில் அடிப்படை வசதிகள் கேட்டு பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அவனியாபுரம்:

    அவனியாபுரம் பகுதியில் உள்ள வள்ளானந்தபுரம், ஜெ.ஜெ.நகர் உள்ளிட்ட பகுதிகளில் பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் சரியாக செய்து தரப்படவில்லை. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் பல முறை மனு கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

    இந்த நிலையில் அப்பகுதியில் பெய்த மழை காரணமாக சார்க்கடை நிரம்பி கழிவுநீர் ரோட்டில் தேங்கியது. மேலும் கழிவுநீர் வெளியேற போதிய வசதிகள் இல்லாததால் பல வீடுகளில் கழிவுநீர் புகுந்து. அந்த பகுதி சேறும், சகதியாக காட்சி அளிக்கிறது.

    இதுகுறித்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. வள்ளானந்தபுரம், ஜெ.ஜெ.நகர் பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. இதனால் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது.

    அதிகாரிகளின் மெத்தன போக்கை கண்டித்து கழிவு நீரை அகற்றி, பாதாள சாக்கடை, தெருவிளக்கு, சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி இன்று காலை வள்ளானந்தபுரம், ஜெ.ஜெ. நகர் பகுதி மக்கள் விமான நிலைய ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    மறியல் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் எந்த பலனும் இல்லை அதிகாரிகள் யாரும் வரவில்லை. மறியல் காரணமாக ஒரு மணி நேரத் துக்கு மேலாக போக்கு வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×