search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துடியலூரில் பஸ் நிலையத்தில் தலையில் கல்லைபோட்டு பெண் கொலை
    X

    துடியலூரில் பஸ் நிலையத்தில் தலையில் கல்லைபோட்டு பெண் கொலை

    துடியலூரில் பஸ் நிலையத்தில் தலையில் கல்லைபோட்டு பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து கட்டிடத்தொழிலாளியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கவுண்டம்பாளையம்:

    கோவை துடியலூரில் புதிய பஸ் நிலையம் சமீபத்தில் திறக்கப்பட்டது. பஸ் நிலையத்தில் மின்விசிறி, மின் விளக்கு உள்ளது. இங்கு வீடு இல்லாதோர்படுத்து தூங்குவது வழக்கம்.

    இதே பகுதியை சேர்ந்த ருக்மணி (வயது 42). இந்த பஸ் நிலையத்தில் படுத்து தூங்கி வந்தார். ருக்மணி வீட்டு வேலை மற்றும் குப்பை சேகரித்து பிழைப்பு நடத்தி வந்தார்.

    இந்நிலையில் அதே பஸ் நிலையத்தில் தினம் படுத்து தூங்கிய கட்டிடத்தொழிலாளி சின்னசாமி (60) என்பவருக்கும், ருக்மணிக்கும் பழக்கம் ஏற்பட்டு சேர்ந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் இன்று அதிகாலை எழுந்த சிலர் ருக்மணியை பார்த்தபோது அவர் ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்தார். அருகில் ஒரு கல் கிடந்தது. அதிலும் ரத்தக்கறை இருந்தது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் ருக்மணியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்து விட்டதாக அலறி சத்தம்போட்டனர்.

    இது குறித்து துடியலூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ருக்மணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சந்தேகத்தின் பேரில் கட்டிடத்தொழிலாளி சின்னசாமியை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இது குறித்து போலீசார் கூறும்போது ருக்மணிக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டிருக்கலாம். அப்போது ரத்த வாந்தி ஏற்பட்டு ரத்தம் அந்த பகுதி முழுவதும் பரவியிருக்கலாம். அதில் அருகில் இருந்த கல்லிலும் பட்டிருக்கலாம். இதனால் கொலை போன்று பொதுமக்கள் சந்தேகப்பட்டனர்.

    ருக்மணியின் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து முழுமையாக கூறு முடியும் என்றனர்.

    பஸ் நிலையத்தில் பெண் அடித்துக்கொலை செய்யப்பட்டதாக பரவிய தகவல் அந்த பகுதியில் இன்று காலை பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
    Next Story
    ×