என் மலர்

    செய்திகள்

    திண்டுக்கல் அருகே பனை விதை ஊன்றியதும் கொட்டித் தீர்த்த மழை
    X

    திண்டுக்கல் அருகே பனை விதை ஊன்றியதும் கொட்டித் தீர்த்த மழை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    திண்டுக்கல் அருகே பனை விதை ஊன்றியதும் மழை கொட்டித் தீர்த்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே பனை விதை ஊன்றியதும் மழை கொட்டித் தீர்த்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    பூலோக கர்ப்பகத்தரு என அழைக்கப்படும் பனை மரத்தின் அனைத்து பாகங்களும் மக்களுக்கு பயன்படுபவையாக உள்ளது. பனை மரத்தில் இருந்து நுங்கு, பதநீர், பனங்கிழங்கு, கருப்பட்டி, பனை நார், பனை ஓலை, உள்ளிட்ட மரத்தின் அனைத்து பாகங்களும் பயன்படுத்தப்படுகிறது.

    ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் பனை மரத்தை யாரும் விரும்புவது இல்லை. எனவேதான் தமிழகம் முழுவதும் உள்ள பனை மரங்கள் வெட்டி அழிக்கப்பட்டு செங்கல் காளவாசலுக்கு அனுப்பப்படுகிறது.

    தமிழகத்தில்தான் அதிக அளவில் பனை மரங்கள் இருந்தது. அது தற்போது கனிசமாக குறைந்து விட்டது. ஓங்கி வளரும் பனை மரத்தால் அதிக அளவு மழை பெறுவதாக இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

    அதனைத் தொடர்ந்து தற்போது பனை மர விதை ஊன்றுவதற்கு பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. பனை மரம் ஒரு இடத்தில் இருந்தால் அதன் வேர்கள் பக்க வாட்டில் பரவி மண் அரிப்பை தடுக்கிறது.

    ஏரிக்கரை, குளக்கரைகளில் இதனை ஊன்றினால் கரைகள் உடையாமல் பாதுகாக்கப்படுகிறது. எனவே தான் திண்டுக்கல் மாவட்ட பகுதிகளில் குளங்களை தேர்வு செய்து கரைகளில் பனை விதைகள் ஊன்றும் பணி நடைபெறுகிறது.

    அதன்படி முத்தனம்பட்டி கண்மாயில் பனை மர விதை ஊன்றும் பணி நடந்தது. சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பனை விதைகளை பொதுமக்கள் மற்றும் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் ஊன்றினர்.

    பனை விதைகளை ஊன்றிக் கொண்டு இருக்கும் போதே இடியுடன் கூடிய பலத்த மழை கொட்டித் தீர்த்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். பனை மர விதையை ஊன்றும் போதே இப்படி என்றால் மரம் வளர்ந்தால் எப்படி இருக்கும் என்று ஒருவருக் கொருவர் ஆனந்தத்துடன் பேசிக் கொண்டனர்.

    Next Story
    ×