search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக முதல்வர், காவல்துறையை அவதூறாக பேசிய கருணாஸ் மீது வழக்குப்பதிவு
    X

    தமிழக முதல்வர், காவல்துறையை அவதூறாக பேசிய கருணாஸ் மீது வழக்குப்பதிவு

    வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசிய கருணாஸ், முதல்வரையும், காவல்துறையையும் அவதூறாக பேசிய விவகாரத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #MLAKarunas
    சென்னை:

    நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் கடந்த 16-ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசினார். அப்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி கருணாஸை கண்டு அஞ்சுவதாக தெரிவித்தார்.

    மேலும், காவல்துறை அதிகாரி ஒருவருக்கு சவால் விடுத்த அவர், முடிந்தால் காக்கிச்சட்டையை கழற்றிவிட்டு நேருக்கு நேர் மோதிப்பார்க்குமாறு சவால் விடுத்தார். ஜாதி ரீதியாகவும் பல்வேறு சர்ச்சை கருத்துக்களை கருணாஸ் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    இதனை அடுத்து, முதல்வர் மற்றும் காவல்துறையை அவதூறாக பேசியதாக கருணாஸ் மீது நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். யூ டியூப்பில் வெளியான வீடியோவை ஆதாரமாக கொண்டு 6 பிரிவுகளின் கீழ் கருணாஸ் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளது. #MLAKarunas
    Next Story
    ×