என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பதவியில் இருக்கும் போதே 2-வது முறையாக சோதனையை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர்
Byமாலை மலர்5 Sep 2018 8:04 AM GMT (Updated: 5 Sep 2018 8:32 AM GMT)
தமிழகத்தில் பதவியில் இருக்கும் அமைச்சர் ஒருவர் வீட்டில் சி.பி.ஐ. மற்றும் வருமான வரித்துறை போன்ற விசாரணை அமைப்புகள் மாறி மாறி சோதனை நடத்தி இருப்பது இதுவே முதல் முறையாகும். #ADMK #GutkhaScam #MinisterVijayabaskar
தமிழக சுகாதாரத்துறை அமைச்சராக எம்.ஆர்.விஜயபாஸ்கர் பதவி வகித்து வருகிறார். ஜெயலலிதா மறைவுக்கு பின் இவர் மீது பல்வேறு புகார்கள் கூறப்பட்டன.
ஜெயலலிதா சிகிச்சை விவரங்களை வெளியிடவில்லை என்று புகார் கூறப்பட்டது. ஜெயலலிதா மறைவுக்கு பின் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வந்தது.
இந்த இடைத்தேர்தலில் பணப்பட்டு வாடா மிகப் பெரிய அளவில் நடப்பதாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் கடந்த 2017-ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
அப்போது பணப்பட்டு வாடா தொடர்பாக அமைச்சர்கள் பெயருடன் பண விநியோக பட்டியல் கைப்பற்றப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் குடும்பத்தினருக்கு சொந்தமான வீடு, அலுவலகம் மற்றும் கல்குவாரிகளில் தொடர்ச்சியாக பலமுறை சோதனை நடத்தப்பட்டது.
முன்பு பணப்பட்டுவாடா புகாரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இப்போது ஊழல் புகாரில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி இருக்கிறார்கள்.
தமிழகத்தில் பதவியில் இருக்கும் அமைச்சர் ஒருவர் வீட்டில் சி.பி.ஐ. மற்றும் வருமான வரித்துறை போன்ற விசாரணை அமைப்புகள் மாறி மாறி சோதனை நடத்தி இருப்பது இதுவே முதல் முறையாகும். புகார்கள் வெளியானதுமே அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால் அமைச்சர் பதவி விலக மறுத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. #ADMK #MinisterVijayabaskar
ஜெயலலிதா சிகிச்சை விவரங்களை வெளியிடவில்லை என்று புகார் கூறப்பட்டது. ஜெயலலிதா மறைவுக்கு பின் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வந்தது.
இந்த இடைத்தேர்தலில் பணப்பட்டு வாடா மிகப் பெரிய அளவில் நடப்பதாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் கடந்த 2017-ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
அப்போது பணப்பட்டு வாடா தொடர்பாக அமைச்சர்கள் பெயருடன் பண விநியோக பட்டியல் கைப்பற்றப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் குடும்பத்தினருக்கு சொந்தமான வீடு, அலுவலகம் மற்றும் கல்குவாரிகளில் தொடர்ச்சியாக பலமுறை சோதனை நடத்தப்பட்டது.
அடுத்து குட்கா ஊழல் தொடர்பாக சிக்கிய ரகசிய டைரியில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பெயர் இடம் பெற்று இருந்தது. இதனால் அவரது வீட்டில் இன்று மீண்டும் சி.பி.ஐ. சோதனை நடந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்பு பணப்பட்டுவாடா புகாரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இப்போது ஊழல் புகாரில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி இருக்கிறார்கள்.
தமிழகத்தில் பதவியில் இருக்கும் அமைச்சர் ஒருவர் வீட்டில் சி.பி.ஐ. மற்றும் வருமான வரித்துறை போன்ற விசாரணை அமைப்புகள் மாறி மாறி சோதனை நடத்தி இருப்பது இதுவே முதல் முறையாகும். புகார்கள் வெளியானதுமே அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால் அமைச்சர் பதவி விலக மறுத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. #ADMK #MinisterVijayabaskar
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X