search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதிய வாக்காளர்களை சேர்க்க அதிமுகவினர் தீவிரம் காட்ட வேண்டும்- ராஜன்செல்லப்பா அறிக்கை
    X

    புதிய வாக்காளர்களை சேர்க்க அதிமுகவினர் தீவிரம் காட்ட வேண்டும்- ராஜன்செல்லப்பா அறிக்கை

    புதிய வாக்காளர் சேர்க்கை தொடர்பாக அ.தி.மு.க. நிர்வாகிகள் தீவிரம் காட்ட வேண்டும் என்று ராஜன்செல்லப்பா எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

    மதுரை:

    மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    18 வயது பூர்த்தியான புதிய வாக்காளர்களை சேர்ப்பதற்காக தேர்தல் ஆணையம் 9 மற்றும் 23-ந்தேதிகளில் சிறப்பு முகாமை அறிவித்துள்ளது.

    எனவே அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் ஆணைக்கிணங்க மதுரை புறநகர் மாவட்டத்திற்குட்பட்ட திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி, மேலூர், திருமங்கலம், சோழவந்தான், மதுரை கிழக்கு ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளிலும் புதிய வாக்காளர் சேர்க்கை தொடர்பாக அ.தி.மு.க. நிர்வாகிகள் தீவிரம் காட்ட வேண்டும்.

    வாக்குச்சாவடிகளில் நடைபெறும் முகாம்களில் உரிய வாக்காளர்களை சேர்க்க தீவிரமாக பணியாற்றிட வேண்டும். வாக்காளர்கள் சேர்த்தல், திருத்தம், நீக்குதல் போன்றவற்றில் பொதுமக்களுக்கு உதவிட வேண்டும்.

    வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் நிர்வாகிகள் சிறப்பு முகாம்களில் பொது மக்களுக்கு உதவிடும் வகையில் பணியாற்றிட வேண்டும். மாவட்ட, பகுதி, நகர், பேரூர், ஒன்றிய, வட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், இன்னாள், முன்னாள் கூட்டுறவு சங்க நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் நிர்வாகிகள் இந்த பணியில் ஈடுபட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×