என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
மடிப்பாக்கம் அருகே இரும்பு கடையில் மர்ம பொருள் வெடித்ததில் வியாபாரியின் கைகள் கருகின
Byமாலை மலர்3 Sep 2018 9:58 AM GMT (Updated: 3 Sep 2018 9:58 AM GMT)
மடிப்பாக்கம் அருகே பழைய இரும்பு கடையில் மர்ம பொருள் வெடித்து தீப்பிடித்தில் வியாபாரியின் 2 கைகள் கருகின.
ஆலந்தூர்:
மடிப்பாக்கத்தை அடுத்த மூவரசன் பட்டில் பழைய இரும்பு பொருட்கள் வாங்கும் கடை நடத்தி வருபவர் ஜெய்சிங்ராஜ். இன்று காலை அவர் கடையில் இருந்த பழைய இரும்பு பொருட்களை தரம்பிரித்து கொண்டு இருந்தார்.
அப்போது உருளையாக இருந்த பொருளை அழுத்தினார். திடீரென அந்த பொருள் பலத்த சத்தத்துடன் வெடித்தது. மேலும் கடையிலும் தீப்பிடித்தது. இதில் வியாபாரி ஜெய்சிங்ராஜின் 2 கைகளும் கருகின.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் கடையில் பிடித்த தீயை அணைத்தனர். காயம் அடைந்த ஜெய்சிங்ராஜை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
கடையில் வெடித்த பொருள் எந்த வகையானது என்பது தெரியவில்லை. வெடி பொருளாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இதையடுத்து கடையில் சிதறிய மர்மபொருளின் தூள்களை சேகரித்து பரிசோதனைக்காக அனுப்பி உள்ளனர். இதுகுறித்து மடிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மடிப்பாக்கத்தை அடுத்த மூவரசன் பட்டில் பழைய இரும்பு பொருட்கள் வாங்கும் கடை நடத்தி வருபவர் ஜெய்சிங்ராஜ். இன்று காலை அவர் கடையில் இருந்த பழைய இரும்பு பொருட்களை தரம்பிரித்து கொண்டு இருந்தார்.
அப்போது உருளையாக இருந்த பொருளை அழுத்தினார். திடீரென அந்த பொருள் பலத்த சத்தத்துடன் வெடித்தது. மேலும் கடையிலும் தீப்பிடித்தது. இதில் வியாபாரி ஜெய்சிங்ராஜின் 2 கைகளும் கருகின.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் கடையில் பிடித்த தீயை அணைத்தனர். காயம் அடைந்த ஜெய்சிங்ராஜை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
கடையில் வெடித்த பொருள் எந்த வகையானது என்பது தெரியவில்லை. வெடி பொருளாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இதையடுத்து கடையில் சிதறிய மர்மபொருளின் தூள்களை சேகரித்து பரிசோதனைக்காக அனுப்பி உள்ளனர். இதுகுறித்து மடிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X