search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்டுடன் வாலிபர் கைது
    X

    மதுரை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்டுடன் வாலிபர் கைது

    மதுரை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்டுடன் வந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுரை:

    மதுரை விமான நிலையத்தில் குடியேற்றப்பிரிவு துறையில் இன்ஸ்பெக்டர் விக்டர் பணியில் இருந்தார். அப்போது இலங்கை விமானத்துக்கான பயணிகளின் விவரம் சரிபார்க்கப்பட்டது. இதில் பயணி ஒருவர் குறித்த விவரம் தவறாக இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து அவரிடம் விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் அவரின் பெயர் வீரகுமார் (24), ஆர்.எம்.எஸ்.காலனி, கருமண்டபம், திருச்சி என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் பெருங்குடி போலீசிடம் ஒப்படைக்கப்பட்டார்.

    போலீசாரின் விசாரணையில், வீரகுமாரின் ஆதார் கார்டு போலி என்பதும், இன்னொருவரின் பாஸ்போர்ட்டில் பயணம் செய்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து மதுரை விமான நிலைய அதிகாரி விக்டர் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சிவசக்தி வழக்குப்பதிவு செய்து வீரகுமாரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×