search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டுப்பாளையத்தில் 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்- ஆண் குழந்தை பிறந்தது
    X

    மேட்டுப்பாளையத்தில் 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்- ஆண் குழந்தை பிறந்தது

    மேட்டுப்பாளையம் அருகே 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள உப்பு பள்ளத்தை சேர்ந்தவர் பூபாலன். கட்டிட தொழிலாளி. இவரது மனைவி நந்தினி (22). இவர்களுக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் நந்தினி மீண்டும் கர்ப்பம் அடைந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு நேற்று இரவு 12.30 மணியளவில் பிரசவ வலி ஏற்பட்டது.

    இது குறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேட்டுப்பாளையத்தில் இருந்து சென்ற 108 ஆம்புலன்ஸ் நந்தினியை ஏற்றிக் கொண்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தது.

    வரும் வழியில் நந்தினிக்கு பிரசவ வலி அதிகமானது. இதனால் ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டது. அதில் வந்த நந்தினியின் தாய் சரசு, ஆம்புலன்ஸ் டிரைவர் நந்த குமார், அவசர மருத்துவ உதவியாளர் விக்னேஷ் ஆகியோர் பிரசவம் பார்த்தனர்.

    நந்தினிக்கு ஆண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமாக உள்ளனர். அவர்கள் மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அனுதிக்கப்பட்டு உள்ளனர். #tamilnews
    Next Story
    ×