என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த வியாபாரியை கொன்ற மனைவி உள்பட 3 பேர் கைது
By
மாலை மலர்17 Aug 2018 9:29 AM GMT (Updated: 17 Aug 2018 9:29 AM GMT)

தருமபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த வியாபாரியை கொலை செய்ததது குறித்து மனைவி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே உள்ள வகுத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 45). வியாபாரியான இவர் ஆவின் பாலகமும், ஏலச்சீட்டும் நடத்தி வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் கம்பைநல்லூர் அருகே பெரிசாகவுண்டம்பட்டி ஆற்றுப்பாலத்தின் கீழ்பகுதியில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இந்த கொலை குறித்து கம்பைநல்லூர் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் அவரது மனைவியே ஆட்களை ஏவி கணவரை கொலை செய்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவரது மனைவி ஜெயந்தி (35), அவரது கள்ளக்காதலன் அண்ணாமலை (25), மணிகண்டன் (26) என்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கொலை செய்யப்பட்ட அண்ணாமலையின் செல்போன் அழைப்புகளை போலீசார் ஆய்வு செய்து விசாரித்தபோது அருள்பாண்டியன் சீட்டு எடுத்து கொடுக்க வேண்டிய பணம் ஒன்றரை லட்சத்தை கொடுப்பதாக கூறி அண்ணாமலையை காரில் அழைத்து சென்று தலையில் இரும்பு கம்பியால் தாக்கிவிட்டு பின்னர் அவரது உடலை மணிகண்டன் உதவியுடன் காரில் ஏற்றிச்சென்று பாலத்தில் இருந்து கீழே தள்ளி அவர் தவறி விழுந்து இறந்ததாக நாடகமாட முயற்சி செய்தனர்.
மேலும் ஜெயந்திக்கும், அருள்பாண்டியனுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதை அண்ணாமலை தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த ஜெயந்தி தனது கள்ளக்காதலன் மற்றும் அவரது உறவினர் ஆகியோர் துணையுடன் இந்த கொலையை செய்ததும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. 3 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இன்று அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளனர். கைதான அருள்பாண்டியன் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அவர் கடந்த 20 நாட்களாக அண்ணாமலையை கொல்ல சமயம் பார்த்து காத்திருந்ததும், கடந்த சில நாட்களுக்கு முன்பு அண்ணாமலை தனியாக சென்றபோது அவரிடம் போனில் பேசி அவரை பணம் வாங்க நேரில் வர அழைத்து கடத்தி சென்று கொன்றதும் விசாரணையில் தெரியவந்தது.
கொலை செய்யப்பட்ட அண்ணாமலை குண்டான உடல் அமைப்பு கொண்டவர். அவருடைய உடல் எடை 110 கிலோ ஆகும். அவரை இவர்கள் 3 பேர் மட்டுமே கொன்றிருக்க வாய்ப்பு இல்லை என்றும், இதில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் போலீசார் கருதுகிறார்கள். அவர்கள் யார், யார்? என்றும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். #tamilnews
தருமபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே உள்ள வகுத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 45). வியாபாரியான இவர் ஆவின் பாலகமும், ஏலச்சீட்டும் நடத்தி வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் கம்பைநல்லூர் அருகே பெரிசாகவுண்டம்பட்டி ஆற்றுப்பாலத்தின் கீழ்பகுதியில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இந்த கொலை குறித்து கம்பைநல்லூர் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் அவரது மனைவியே ஆட்களை ஏவி கணவரை கொலை செய்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவரது மனைவி ஜெயந்தி (35), அவரது கள்ளக்காதலன் அண்ணாமலை (25), மணிகண்டன் (26) என்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கொலை செய்யப்பட்ட அண்ணாமலையின் செல்போன் அழைப்புகளை போலீசார் ஆய்வு செய்து விசாரித்தபோது அருள்பாண்டியன் சீட்டு எடுத்து கொடுக்க வேண்டிய பணம் ஒன்றரை லட்சத்தை கொடுப்பதாக கூறி அண்ணாமலையை காரில் அழைத்து சென்று தலையில் இரும்பு கம்பியால் தாக்கிவிட்டு பின்னர் அவரது உடலை மணிகண்டன் உதவியுடன் காரில் ஏற்றிச்சென்று பாலத்தில் இருந்து கீழே தள்ளி அவர் தவறி விழுந்து இறந்ததாக நாடகமாட முயற்சி செய்தனர்.
மேலும் ஜெயந்திக்கும், அருள்பாண்டியனுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதை அண்ணாமலை தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த ஜெயந்தி தனது கள்ளக்காதலன் மற்றும் அவரது உறவினர் ஆகியோர் துணையுடன் இந்த கொலையை செய்ததும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. 3 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இன்று அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளனர். கைதான அருள்பாண்டியன் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அவர் கடந்த 20 நாட்களாக அண்ணாமலையை கொல்ல சமயம் பார்த்து காத்திருந்ததும், கடந்த சில நாட்களுக்கு முன்பு அண்ணாமலை தனியாக சென்றபோது அவரிடம் போனில் பேசி அவரை பணம் வாங்க நேரில் வர அழைத்து கடத்தி சென்று கொன்றதும் விசாரணையில் தெரியவந்தது.
கொலை செய்யப்பட்ட அண்ணாமலை குண்டான உடல் அமைப்பு கொண்டவர். அவருடைய உடல் எடை 110 கிலோ ஆகும். அவரை இவர்கள் 3 பேர் மட்டுமே கொன்றிருக்க வாய்ப்பு இல்லை என்றும், இதில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் போலீசார் கருதுகிறார்கள். அவர்கள் யார், யார்? என்றும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
