என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

மலேசியாவில் இருந்து வந்த சென்னை விமானத்தில் ரூ.20 லட்சம் தங்க நகை கடத்தல்

ஆலந்தூர்:
மலேசியாவில் இருந்து நேற்று இரவு 11.30 மணிக்கு சென்னை வந்த விமானத்தில் பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது மலேசிய நாட்டைச் சேர்ந்த பெண் பயணி ஒருவர் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்தார். அவரிடம் அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார்.
இதையடுத்து அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை நடத்தினார்கள். அப்போது அவர் வைத்திருந்த கைப்பையில் 2 தங்க நகைகள் இருந்தன. அவரது சேலையில் 10 தங்க நகைகள் டிசைன்கள் போல வைத்து கடத்தி வந்தார். அந்த தங்க நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் எடை 650 கிராம் ஆகும். அதன் மதிப்பு ரூ.20 லட்சம்.
அந்த பயணியிடம் விசாரணை நடத்தியபோது அவரது பெயர் விமலேஷ்வரி என்றும் மலேசியாவைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. அவர் சுற்றுலா விசாவில் சென்னை வந்திருந்தார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
