search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல்லில் லாரி மோதி பள்ளி மாணவி பலி
    X

    திண்டுக்கல்லில் லாரி மோதி பள்ளி மாணவி பலி

    திண்டுக்கல்லில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் பள்ளி மாணவி பரிதாபமாக பலியானார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே பித்தளைப்பட்டியை சேர்ந்தவர் அருள்ஞான பிரகாசம் மகள் கேசியாராணி (வயது17). கோவிலூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    இவரது உறவினர் அனுமந்தராயன் கோட்டையை சேர்ந்த அருள்ஞானபாத்திமா (37) என்வருடன் பேட்டரி பைக்கில் அனுமந்தராயன் கோட்டையில் இருந்து ஏ.வெள்ளோடுக்கு சென்று கொண்டிருந்தார்.

    திண்டுக்கல்-மதுரை 4 வழிச்சாலையில் காப்பி கடை பிரிவு அருகே வேகமாக வந்த கார் இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் நிலை தடுமாறிய பைக் மீது பின்னால் வந்த லாரி மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

    கேசியாராணி சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த அருள்ஞானபாத்திமா திண்டுக்கல் அரசு ஆஸ்பத் திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து அம்பாத்துரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கார், லாரி டிரைவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×