search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் தினகரன் வெற்றி பெற முடியாது- அமைச்சர் உதயகுமார் கடும் தாக்கு
    X

    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் தினகரன் வெற்றி பெற முடியாது- அமைச்சர் உதயகுமார் கடும் தாக்கு

    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் டி.டி.வி. தினகரன் வெற்றி பெற முடியாது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். #RBUdhayakumar #TTVDhinakaran
    மதுரை:

    மதுரை மாவட்டத்தில் ஜெயலலிதா பேரவை சார்பில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த நலிவுற்ற குடும்பங்களுக்கு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நிதி உதவி வழங்கி வருகிறார்.

    அதன்படி திருமங்கலம் அருகே உள்ள கள்ளிக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த நலிவுற்ற 170 குடும்பத்தினர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று நிதி உதவி வழங்கினார்.

    ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தலா ரூ.10 ஆயிரம் என 170 குடும்பங்களுக்கு ரூ.17 லட்சம் நிதி உதவியை அமைச்சர் வழங்கினார். நிதி உதவி பெற்ற அ.தி.மு.க.வினர் குடும்பத்துடன் அவருக்கு நன்றி தெரிவித்தனர்.

    பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் அம்மா வழியில் நல்லாட்சி நடத்தி வருகிறார்கள்.

    அ.தி.மு.க. அரசு சாதனைகளை விளக்கும் வகையில் ஜெயலலிதா பேரவை சார்பில் கடந்த 15-ந் தேதி மதுரை மாவட்டத்தில் சைக்கிள் பேரணி நடைபெற்றது.

    முதற்கட்டமாக 10 சட்டமன்றத்தொகுதிக்கு உட்பட்ட பொதுமக்களை சந்தித்து அரசின் சாதனைகளை எடுத்துக் கூறினோம்.

    2-வது கட்டமாக சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் சைக்கிள் பேரணி நடந்தது. இதன் மூலம் லட்சக்கணக்கான மக்களை நேரடியாக சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

    3-வது கட்டமாக வருகிற 17-ந் தேதி திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் சைக்கிள் பேரணி நடக்கிறது. 24-ந் தேதி வரை நடக்கும் இந்த பேரணியில் மக்களை சந்தித்து அரசின் சாதனைகளை எடுத்துக் கூறுவோம்.

    இதனைத் தொடர்ந்து வருகிற 30-ந் தேதி முதல் அடுத்த மாதம் 14-ந் தேதி வரை தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் சைக்கிள் பேரணி நடத்தப்படும்.

    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் எப்போது நடந்தாலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும். அந்த தொகுதியில் துணைக்கோள் நகரம், எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட வளர்ச்சிப்பணிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக மக்கள் அ.தி.மு.க.வுக்கு வாக்களித்து வெற்றி பெற தயாராகி விட்டார்கள்.


    டி.டி.வி.தினகரன் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று கூறியுள்ளார்.

    அவர் தாய் வீட்டை பிரிந்து தனிக்குடித்தனம் சென்று விட்டார். திருப்பரங்குன்றம் தொகுதி இரட்டை இலையின் கோட்டை ஆகும். எனவே டி.டி.வி.தினகரன் அங்கு வெற்றி பெற முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #RBUdhayakumar #TTVDhinakaran
    Next Story
    ×