search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல் அருகே வரதட்சணை கொடுமை- கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு
    X

    திண்டுக்கல் அருகே வரதட்சணை கொடுமை- கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு

    திண்டுக்கல் அருகே மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்திய கணவர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டை அருகே உள்ள நெல்லூரைச் சேர்ந்தவர் சின்னமுருகன். இவரது மகன் பாண்டி (வயது 28) என்பவருக்கும், நரசிங்காபுரத்தைச் சேர்ந்த பிரவீனா (19) என்பவருக்கும் கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் நடந்தது. 

    திருமணத்தின் போது 7 பவுன் நகை, ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் சீர் வரிசைகள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக மேலும் ரூ.1 லட்சம் பணம், 3 பவுன் கூடுதல் வரதட்சணையாக கேட்டு பிரவீனாவை அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் கொடுமை படுத்தி வந்துள்ளனர்.

    இது குறித்து ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பிரவீனா புகார் அளித்தார். அதன் பேரில் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்திய கணவர் பாண்டி, மாமனார் சின்ன முருகன், மாமியார் மாயக்காள் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×