என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திண்டுக்கல் அருகே வரதட்சணை கொடுமை- கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்9 Aug 2018 10:29 AM GMT (Updated: 9 Aug 2018 10:29 AM GMT)
திண்டுக்கல் அருகே மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்திய கணவர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டை அருகே உள்ள நெல்லூரைச் சேர்ந்தவர் சின்னமுருகன். இவரது மகன் பாண்டி (வயது 28) என்பவருக்கும், நரசிங்காபுரத்தைச் சேர்ந்த பிரவீனா (19) என்பவருக்கும் கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் நடந்தது.
திருமணத்தின் போது 7 பவுன் நகை, ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் சீர் வரிசைகள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக மேலும் ரூ.1 லட்சம் பணம், 3 பவுன் கூடுதல் வரதட்சணையாக கேட்டு பிரவீனாவை அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் கொடுமை படுத்தி வந்துள்ளனர்.
இது குறித்து ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பிரவீனா புகார் அளித்தார். அதன் பேரில் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்திய கணவர் பாண்டி, மாமனார் சின்ன முருகன், மாமியார் மாயக்காள் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X