என் மலர்
செய்திகள்

புதுப்பேட்டையில் பெண்ணிடம் செயின் பறிப்பு
புதுப்பேட்டையில் பெண்ணிடம் நகை பறித்த கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை:
புதுப்பேட்டை திருவேங்கடம் தெருவை சேர்ந்தவர் சாந்தி (வயது47). இவர் நேற்று இரவு அதே பகுதியில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்களில் பின்னால் அமர்ந்திருந்த வாலிபர் சாந்தியின் கழுத்தில் கிடந்த 10 பவுன் செயினை பறித்தான். பின்னர் இருவரும் தப்பி ஓடிவிட்டனர்.
இதுபற்றி சாந்தி எழும்பூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
செயின் பறிப்பு சம்பவங்களை கட்டுப்படுத்த போலீசார் கேமராக்களை பொருத்தி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இருப்பினும் செயின் பறிப்பு சம்பவங்கள் தினமும் அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன.
புதுப்பேட்டை திருவேங்கடம் தெருவை சேர்ந்தவர் சாந்தி (வயது47). இவர் நேற்று இரவு அதே பகுதியில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்களில் பின்னால் அமர்ந்திருந்த வாலிபர் சாந்தியின் கழுத்தில் கிடந்த 10 பவுன் செயினை பறித்தான். பின்னர் இருவரும் தப்பி ஓடிவிட்டனர்.
இதுபற்றி சாந்தி எழும்பூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
செயின் பறிப்பு சம்பவங்களை கட்டுப்படுத்த போலீசார் கேமராக்களை பொருத்தி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இருப்பினும் செயின் பறிப்பு சம்பவங்கள் தினமும் அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன.
Next Story






