என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரிந்து சென்ற காதல் மனைவியிடம் விஷம் குடித்துவிட்டதாக கூறிய கணவன் பலி
Byமாலை மலர்28 July 2018 10:34 AM GMT (Updated: 28 July 2018 10:34 AM GMT)
நம்பியூர் அருகே பிரிந்து சென்ற காதல் மனைவியிடம் விஷம் குடித்துவிட்டதாக கூறிய கணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நம்பியூர்:
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள பழனி கவுண்டன்பாளையத்தில் வசித்தவர் பிரபாகர் (வயது 30). சொந்த ஊர் நம்பியூர் அடுத்த காந்திபுரம் வடக்கு வீதியாகும்.
இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அப்போது அதே கம்பெனியில் வேலை பார்த்த சர்மிளா தேவி என்ற பெண்ணை காலித்தார். பிறகு இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பிரபாகருக்கு குடிபழக்கம் இருந்ததாம். குடித்து விட்டு வீட்டுக்கு வரும் போது இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இதில் கணவருடன் கோபித்து கொண்டு மனைவி சர்மிளா தேவி பெற்றோர் வீட்டுக்கு சென்று விடுவார். பிறகு அவரிடம் இனி நான் குடிக்க மாட்டேன் என்று சமாதானம் கூறி அழைத்து வருவாராம்.
இதே போல் மீண்டும் ஏற்பட்ட தகராறில் மனைவி கோபித்து கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
மனைவி பிரிந்து சென்றதால் வேதனையுடன் காணப்பட்ட பிரபாகர் கடந்த 20-ந் தேதி வீட்டில் மதுவுடன் விஷம் கலந்து குடித்து விட்டார்.
விஷம் குடித்த அவர் போனில் மனைவியிடம் தான் விஷம் குடித்து விட்டதாக கூறினார்.
உடனே அவரும் உறவினர்களும் ஓடி வந்து விஷம் குடித்து மயங்கி கிடந்த பிரபாகரை மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி பிரபாகர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து நம்பியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள பழனி கவுண்டன்பாளையத்தில் வசித்தவர் பிரபாகர் (வயது 30). சொந்த ஊர் நம்பியூர் அடுத்த காந்திபுரம் வடக்கு வீதியாகும்.
இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அப்போது அதே கம்பெனியில் வேலை பார்த்த சர்மிளா தேவி என்ற பெண்ணை காலித்தார். பிறகு இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பிரபாகருக்கு குடிபழக்கம் இருந்ததாம். குடித்து விட்டு வீட்டுக்கு வரும் போது இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இதில் கணவருடன் கோபித்து கொண்டு மனைவி சர்மிளா தேவி பெற்றோர் வீட்டுக்கு சென்று விடுவார். பிறகு அவரிடம் இனி நான் குடிக்க மாட்டேன் என்று சமாதானம் கூறி அழைத்து வருவாராம்.
இதே போல் மீண்டும் ஏற்பட்ட தகராறில் மனைவி கோபித்து கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
மனைவி பிரிந்து சென்றதால் வேதனையுடன் காணப்பட்ட பிரபாகர் கடந்த 20-ந் தேதி வீட்டில் மதுவுடன் விஷம் கலந்து குடித்து விட்டார்.
விஷம் குடித்த அவர் போனில் மனைவியிடம் தான் விஷம் குடித்து விட்டதாக கூறினார்.
உடனே அவரும் உறவினர்களும் ஓடி வந்து விஷம் குடித்து மயங்கி கிடந்த பிரபாகரை மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி பிரபாகர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து நம்பியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X