என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
8 வழி சாலைக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் உதவித்தொகை: கலெக்டரிடம் வலியுறுத்தல்
Byமாலை மலர்25 July 2018 5:20 PM GMT (Updated: 25 July 2018 5:20 PM GMT)
8-வழி பசுமை சாலைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் ஒவ்வொரு பேருக்கும் மாதம் ரூ.5 ஆயிரம் உதவி தொகை வழங்க வேண்டும் என கலெக்டரிடம் வலியுறுத்தியுள்ளனர்.
சேலம்:
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் ரோகிணி தலைமை தாங்கினார். இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விவசாயிகள் கூறியதாவது:-
8-வழி பசுமை சாலைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் ஒவ்வொரு பேருக்கும் மாதம் ரூ.5 ஆயிரம் உதவி தொகை வழங்க வேண்டும். தலைவாசல் பகுதியில் ரேசன் கடைகளில் வழங்கப்படும் அரிசிகள் மிகவும் மோசமாக உள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர் நிலைகளை தூர்வார வேண்டும். பயிர் காப்பீட்டு திட்டம் மூலம் அனைத்து விவசாயிகளுக்கும் இன்சூரன்ஸ் தொகை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதற்கு கலெக்டர் ரோகிணி பதில் அளித்து பேசுகையில் ரேசன் அரிசி தரம் குறைவாக இருப்பது குறித்து வட்ட வழங்கல் துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்படும் என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X