என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நெல்லிக்குப்பம் அருகே இளம்பெண் மர்ம மரணத்தில் துப்பு துலங்கியது
Byமாலை மலர்25 July 2018 12:32 PM GMT (Updated: 25 July 2018 12:32 PM GMT)
நெல்லிக்குப்பம் அருகே இளம்பெண் மர்மான முறையில் இறந்து கிடந்த சம்பவத்தில் போலீசாருக்கு தகவல் கிடைத்ததுள்ளது.
நெல்லிக்குப்பம்:
நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கதை சேர்ந்தவர் முத்து. லாரி டிரைவர். இவருடைய மகள் ஹேமலதா (வயது 18). கடந்த 20-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றார்.
கடந்த 22-ந் தேதி மதியம் இறந்த நிலையில் ஹேமலதாவின் உடலை ஒரு வாலிபர் மேல்பட்டாம் பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து விட்டு தப்பி ஓடி விட்டார்.
இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்றனர். ஹேமலதா தந்தை முத்துவிடம் ஹேமலதா எப்படி இறந்தார், உடலை வைத்து விட்டு தப்பி ஓடிய வாலிபர் யார் என்று பல்வேறு கோணத்தில் விசாரணை செய்தனர்.
அதில் பல புதிய தகவல்கள் கிடைத்தது.
ஹேமலதா பகண்டை பகுதியை சேர்ந்த காத்தவராயன் என்பவரை நடுவீரப்பட்டு கோவிலில் கல்யாணம் செய்துகொண்டார். பின்னர் காத்தவராயனுடன் ஹேமலதா கொடைக்கானல் மற்றும் பழனிக்கு சுற்றுலா சென்றார்.
அங்கு தனியார் விடுதியில் ஹேமலதா துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதன் பிறகு ஹேமலதா உடலை மேல்பட்டாம்பாக்கத்தில் உள்ள அவரது தந்தை முத்து வீட்டில் வைத்து விட்டு காத்தவராயன் சென்று விட்டார் என்று தெரிந்தது.
ஹேமலதா வரதட்சணை கொடுமையால் இறந்திருக்கலாம் என போலீசார் வழக்குப்பதிவு செய்து சப்-கலெக்டர் விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காத்தவராயனை போலீசார் தேடி வருகின்றனர். #tamilnews
நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கதை சேர்ந்தவர் முத்து. லாரி டிரைவர். இவருடைய மகள் ஹேமலதா (வயது 18). கடந்த 20-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றார்.
கடந்த 22-ந் தேதி மதியம் இறந்த நிலையில் ஹேமலதாவின் உடலை ஒரு வாலிபர் மேல்பட்டாம் பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து விட்டு தப்பி ஓடி விட்டார்.
இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்றனர். ஹேமலதா தந்தை முத்துவிடம் ஹேமலதா எப்படி இறந்தார், உடலை வைத்து விட்டு தப்பி ஓடிய வாலிபர் யார் என்று பல்வேறு கோணத்தில் விசாரணை செய்தனர்.
அதில் பல புதிய தகவல்கள் கிடைத்தது.
ஹேமலதா பகண்டை பகுதியை சேர்ந்த காத்தவராயன் என்பவரை நடுவீரப்பட்டு கோவிலில் கல்யாணம் செய்துகொண்டார். பின்னர் காத்தவராயனுடன் ஹேமலதா கொடைக்கானல் மற்றும் பழனிக்கு சுற்றுலா சென்றார்.
அங்கு தனியார் விடுதியில் ஹேமலதா துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதன் பிறகு ஹேமலதா உடலை மேல்பட்டாம்பாக்கத்தில் உள்ள அவரது தந்தை முத்து வீட்டில் வைத்து விட்டு காத்தவராயன் சென்று விட்டார் என்று தெரிந்தது.
ஹேமலதா வரதட்சணை கொடுமையால் இறந்திருக்கலாம் என போலீசார் வழக்குப்பதிவு செய்து சப்-கலெக்டர் விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காத்தவராயனை போலீசார் தேடி வருகின்றனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X