என் மலர்
செய்திகள்

நாகையில் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
நாகையில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை நீலா மேலவீதியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான காக்கா பிள்ளையார் என்று அழைக்கப்படும் சாபம் தீர்த்த பிள்ளையார் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு குருக்கள் வழக்கம் போல் கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை அந்த பகுதியில் நடைபயிற்சி சென்றவர்கள் கோவிலில் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு நாகை டவுன் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் கோவிலின் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடிசென்றது தெரியவந்தது.
இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் விஜய் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடி சென்றவர்களை தேடி வருகிறார்கள்.
நாகை நீலா மேலவீதியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான காக்கா பிள்ளையார் என்று அழைக்கப்படும் சாபம் தீர்த்த பிள்ளையார் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு குருக்கள் வழக்கம் போல் கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை அந்த பகுதியில் நடைபயிற்சி சென்றவர்கள் கோவிலில் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு நாகை டவுன் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் கோவிலின் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடிசென்றது தெரியவந்தது.
இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் விஜய் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடி சென்றவர்களை தேடி வருகிறார்கள்.
Next Story






