என் மலர்
செய்திகள்

விருத்தாசலம் அருகே தடுப்புச்சுவரில் பால் வேன் மோதி விபத்து - 2 பேர் படுகாயம்
விருத்தாசலம் அருகே சாலையில் உள்ள தடுப்புச் சுவரில் எதிர்பாரதவிதமாக பால் வேன் விபத்துக்குள்ளானதில் வேன் டிரைவர் அன்பழகன், கிளீனர் முருகன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். #accident
விருத்தாசலம்:
கும்பகோணத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி நேற்று இரவு பால் வேன் ஒன்று புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. அந்த வேனை அன்பழகன் (வயது 40) என்பவர் ஓட்டி வந்தார். முருகன் கிளீனராக இருந்தார்.
அந்த வேன் நள்ளிரவு 12 மணிக்கு விருத்தாசலம் தேசியமயமாக்கப்பட்ட வங்கி அருகே வந்தபோது சாலையில் உள்ள தடுப்புச் சுவரில் எதிர்பாரதவிதமாக மோதியது.
இந்த விபத்தில் வேன் டிரைவர் அன்பழகன், கிளீனர் முருகன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து விருத்தாசலம் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #accident
கும்பகோணத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி நேற்று இரவு பால் வேன் ஒன்று புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. அந்த வேனை அன்பழகன் (வயது 40) என்பவர் ஓட்டி வந்தார். முருகன் கிளீனராக இருந்தார்.
அந்த வேன் நள்ளிரவு 12 மணிக்கு விருத்தாசலம் தேசியமயமாக்கப்பட்ட வங்கி அருகே வந்தபோது சாலையில் உள்ள தடுப்புச் சுவரில் எதிர்பாரதவிதமாக மோதியது.
இந்த விபத்தில் வேன் டிரைவர் அன்பழகன், கிளீனர் முருகன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து விருத்தாசலம் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #accident
Next Story






