என் மலர்
செய்திகள்

வாங்கிய கடனை தராததால் வீடு புகுந்து பெண்ணை தாக்கிய கும்பல்
திண்டுக்கல் அருகே வாங்கிய கடனை தராததால் வீடு புகுந்து பெண்ணை தாக்கிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே உள்ள வடுகபட்டியைச் சேர்ந்த தாதன் மனைவி முத்துலெட்சுமி (வயது 40). இவர்கள் குடும்ப தேவைக்காக அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் கடன் வாங்கி இருந்தனர். கடந்த சில நாட்களாக கடன் தொகையை கட்டாமல் இருந்தனர். இது குறித்து அவர்களுக்குள் பல முறை வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று சின்னவர், முருகன் ஆகிய 2 பேரும் கடன் தொகையை கேட்டு சென்றுள்ளனர். இதில் ஏற்பட்ட தகராறில் முத்துலெட்சுமியை அடித்து தாக்கியதுடன் வீட்டில் இருந்த பொருட்களையும் சூறையாடினர்.
படுகாயமடைந்த முத்துலெட்சுமி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வடமதுரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
#tamilnews
திண்டுக்கல் அருகே உள்ள வடுகபட்டியைச் சேர்ந்த தாதன் மனைவி முத்துலெட்சுமி (வயது 40). இவர்கள் குடும்ப தேவைக்காக அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் கடன் வாங்கி இருந்தனர். கடந்த சில நாட்களாக கடன் தொகையை கட்டாமல் இருந்தனர். இது குறித்து அவர்களுக்குள் பல முறை வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று சின்னவர், முருகன் ஆகிய 2 பேரும் கடன் தொகையை கேட்டு சென்றுள்ளனர். இதில் ஏற்பட்ட தகராறில் முத்துலெட்சுமியை அடித்து தாக்கியதுடன் வீட்டில் இருந்த பொருட்களையும் சூறையாடினர்.
படுகாயமடைந்த முத்துலெட்சுமி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வடமதுரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
#tamilnews
Next Story






