search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அனுமதியின்றி மதுபானம் விற்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
    X

    அனுமதியின்றி மதுபானம் விற்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

    துறையூரில் போலீசார் எச்சரிக்கையை மீறி அனுமதியின்றி மதுபானம் விற்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    துறையூர்

    துறைமயூர் மதுவிலக்கு அமல் படுத்தும் பிரிவுசரகத்தில் உள்ள முசிறி வட்டம் திண்ணகோனத்தை சேர்ந்தவர் வேல்முருகன்(வயது 29). இவர் மீது அனுமதியின்றி மதுபானம் விற்றதாக பல வழக்குகள் உள்ளன. 

    தொடர்ந்து போலீசார் எச்சரிக்கை விடுத்தும் மதுபானம் விற்பனையை தொடர்ந்து செய்து வந்ததால் மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக் மதுவிலக்கு அமல்படுத்தும் பிரிவு மாவட்ட கூடுதல் துனை கண்காணிப்பாளர் சீனிவாசன், துணை கண்காணிப்பாளர்கோடிலிங்கம் ஆகியோர் பரிந்துரைப்படி மாவட்ட கலெக்டர் ராசாமணி குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். 

    அதன் படி துறையூர் மது விலக்கு இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார் வேல்ருகனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தார்.
    Next Story
    ×