என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
மேட்டூர் அணை நீர் மட்டம் உயர்ந்து வருவதை படத்தில் காணலாம்.
மேட்டூர் அணைக்கு 32 ஆயிரம் கனஅடி தண்ணீர் வருகிறது- டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு
By
மாலை மலர்11 July 2018 6:49 AM GMT (Updated: 11 July 2018 6:49 AM GMT)

மேட்டூர் அணைக்கு இன்று 32 ஆயிரத்து 284 கன அடியாக நீர் வரத்து அதிகரித்துள்ளதால் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது. #MetturDam
மேட்டூர்:
கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
காவிரியின் குறுக்கே அமைந்துள்ள ஹாரங்கி, ஹேமாவதி, கிருஷ்ண ராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அந்த அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
கபினி ஆறு உற்பத்தியாகும் கேரள மாநிலம் வயநாடு மலைப்பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் நீர்வரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது.
84 அடி உயரம் கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் நேற்று முழு கொள்ளவை எட்டி நிரம்பியது. இதனால் அணைக்கு வரும் உபரி நீர் காவிரியில் திறந்து விடப்படுகிறது. இன்று 38 ஆயிரத்து 667 கன அடி திறந்து விடப்படுகிறது.
124 அடி உயரம் கொண்ட கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 115.2 அடியாக உள்ளது. இன்று தண்ணீர் வரத்து 35 ஆயிரத்து 698 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து 3658 கனஅடி உபரி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
ஹேரங்கி அணைக்கு இன்று காலை 14 ஆயிரத்து 973 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 11 ஆயிரத்து 938 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதே போல ஹேமாவதி அணைக்கு 20 ஆயிரத்து 535 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 2400 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் கிருஷ்ணராஜசாகர் அணைக்கு செல்கிறது.
கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட 42 ஆயிரத்து 200 கன அடி தண்ணீர் தமிழகத்தை நோக்கி வேகமாக வருகிறது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது.
ஒகேனக்கலில் மெயின் அருவி, ஐந்தருவி உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. குளிக்கவும், பரிசல் இயக்கவும் 3-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்வதையும், அருவிகளில் தண்ணீர் கொட்டுவதையும் சுற்றுலா பயணிகள் கரையில் நின்று வேடிக்கை பார்த்து வருகிறார்கள்.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக காவிரி ஆற்றில் 1000 கன அடி தண்ணீர் மட்டுமே திறந்து விடப்பட்டுள்ளதால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
இன்று ஒரே நாளில் 3 அடி உயர்ந்து நீர்மட்டம் 68.42 அடியாக அதிகரித்தது. கடந்த 2 நாட்களில் 5 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கர்நாடக அணைகளில் நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் நாளைக்குள் 70 அடியை தொட்டு விடும்.
மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்தால் அணையின் நீர்மட்டம் தினமும் 1அடி அதிகரிக்கும். தற்போது 32ஆயிரம் கனஅடி தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருப்பதால் அணையின் நீர்மட்டம் தினமும் 3அடி வீதம் உயர வாய்ப்பு உள்ளது.
கிருஷ்ண ராஜசாகர் அணை நீர்மட்டம் 115 அடியை தாண்டி உள்ளது. இந்த அணைக்கு வினாடிக்கு 40ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் இன்னும் ஒரு வாரத்தில் அந்த அணையும் நிரம்பி விடும்.
அதன்பின்னர் அந்த அணையில் இருந்தும் தண்ணீர் தமிழகத்திற்கு திறந்து விடப்படும். தென்மேற்கு பருவமழை காலம் இன்னும் 2 மாதம் உள்ளது. இந்த 2 மாதங்களில் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரிநீர் தமிழகத்திற்கு தொடர்ச்சியாக வரும்.
இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தால் இம்மாத இறுதிக்குள் காவிரி டெல்டா பாசனத்திற்காக அணையிலிருந்து தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டும்போது, அணை திறக்கப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2-ந்தேதி மிகவும் தாமதமாக மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது நீர்மட்டம் 89 அடியாக இருந்தது.
ஆனால் அதன்பிறகு காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் கர்நாடக அணைகளில் இருந்தும் தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் கடந்த ஆண்டு மேட்டூர் அணை நீர்மட்டம் 100அடியைக்கூட எட்டமுடியாமல் போய் விட்டது. இதன் காரணமாக டெல்டா பாசனம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு இதே நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம் 21.75 அடியாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு இன்று 68.42 அடியாக உள்ளது. சென்ற ஆண்டை விட தற்போது அணை நீர்மட்டம் அதிகமாக இருப்பதாலும், நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளதாலும் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது.
மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்ந்து வருவதால் காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். #MetturDam
கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
காவிரியின் குறுக்கே அமைந்துள்ள ஹாரங்கி, ஹேமாவதி, கிருஷ்ண ராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அந்த அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
கபினி ஆறு உற்பத்தியாகும் கேரள மாநிலம் வயநாடு மலைப்பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் நீர்வரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது.
84 அடி உயரம் கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் நேற்று முழு கொள்ளவை எட்டி நிரம்பியது. இதனால் அணைக்கு வரும் உபரி நீர் காவிரியில் திறந்து விடப்படுகிறது. இன்று 38 ஆயிரத்து 667 கன அடி திறந்து விடப்படுகிறது.
124 அடி உயரம் கொண்ட கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 115.2 அடியாக உள்ளது. இன்று தண்ணீர் வரத்து 35 ஆயிரத்து 698 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து 3658 கனஅடி உபரி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
ஹேரங்கி அணைக்கு இன்று காலை 14 ஆயிரத்து 973 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 11 ஆயிரத்து 938 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதே போல ஹேமாவதி அணைக்கு 20 ஆயிரத்து 535 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 2400 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் கிருஷ்ணராஜசாகர் அணைக்கு செல்கிறது.
கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட 42 ஆயிரத்து 200 கன அடி தண்ணீர் தமிழகத்தை நோக்கி வேகமாக வருகிறது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது.
ஒகேனக்கலில் மெயின் அருவி, ஐந்தருவி உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. குளிக்கவும், பரிசல் இயக்கவும் 3-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்வதையும், அருவிகளில் தண்ணீர் கொட்டுவதையும் சுற்றுலா பயணிகள் கரையில் நின்று வேடிக்கை பார்த்து வருகிறார்கள்.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று 14 ஆயிரத்து 434 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 32 ஆயிரத்து 284 கன அடியாக அதிகரித்தது.

இன்று ஒரே நாளில் 3 அடி உயர்ந்து நீர்மட்டம் 68.42 அடியாக அதிகரித்தது. கடந்த 2 நாட்களில் 5 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கர்நாடக அணைகளில் நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் நாளைக்குள் 70 அடியை தொட்டு விடும்.
மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்தால் அணையின் நீர்மட்டம் தினமும் 1அடி அதிகரிக்கும். தற்போது 32ஆயிரம் கனஅடி தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருப்பதால் அணையின் நீர்மட்டம் தினமும் 3அடி வீதம் உயர வாய்ப்பு உள்ளது.
கிருஷ்ண ராஜசாகர் அணை நீர்மட்டம் 115 அடியை தாண்டி உள்ளது. இந்த அணைக்கு வினாடிக்கு 40ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் இன்னும் ஒரு வாரத்தில் அந்த அணையும் நிரம்பி விடும்.
அதன்பின்னர் அந்த அணையில் இருந்தும் தண்ணீர் தமிழகத்திற்கு திறந்து விடப்படும். தென்மேற்கு பருவமழை காலம் இன்னும் 2 மாதம் உள்ளது. இந்த 2 மாதங்களில் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரிநீர் தமிழகத்திற்கு தொடர்ச்சியாக வரும்.
இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தால் இம்மாத இறுதிக்குள் காவிரி டெல்டா பாசனத்திற்காக அணையிலிருந்து தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டும்போது, அணை திறக்கப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2-ந்தேதி மிகவும் தாமதமாக மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது நீர்மட்டம் 89 அடியாக இருந்தது.
ஆனால் அதன்பிறகு காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் கர்நாடக அணைகளில் இருந்தும் தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் கடந்த ஆண்டு மேட்டூர் அணை நீர்மட்டம் 100அடியைக்கூட எட்டமுடியாமல் போய் விட்டது. இதன் காரணமாக டெல்டா பாசனம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு இதே நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம் 21.75 அடியாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு இன்று 68.42 அடியாக உள்ளது. சென்ற ஆண்டை விட தற்போது அணை நீர்மட்டம் அதிகமாக இருப்பதாலும், நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளதாலும் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது.
மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்ந்து வருவதால் காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். #MetturDam
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
