search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முன்னாள் எம்.எல்.ஏ. கோதண்டராமன்
    X
    முன்னாள் எம்.எல்.ஏ. கோதண்டராமன்

    முகையூர் தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. சேவல் கோ.கோதண்டராமன் மரணம்

    முகையூர் தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. சேவல் கோ.கோதண்டராமன் உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை மரணம் அடைந்தார்.
    திருக்கோவிலூர்:

    விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்த முகையூர் தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ சேவல் கோ.கோதண்டராமன். இவரது சொந்த ஊர் முகையூர் அருகே உள்ள கொடுங்கால் கிராமம்.

    கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் சேவல் கோ.கோதண்டராமன் திருக்கோவிலூர் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் பொன்முடியிடம் தோல்வி அடைந்தார்.

    கடந்த சில மாதங்களாக சேவல் கோ.கோதண்டராமன் உடல்நலக்குறைவால் அவதிபட்டு வந்தார். இதைத்தொடர்ந்து அவர் சென்னையில் ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலன் அளிக்காமல் சேவல் கோ.கோதண்டராமன் இறந்தார். இவருக்கு வயது 67 ஆகும். இவரது உடல் இன்று மாலை சொந்த ஊரான கொடுங்கால் கிராமத்துக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கு அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.

    இறந்த சேவல் கோ.கோதண்டராமன் வக்கீலுக்கு படித்துள்ளார். இவருக்கு சுசீலா என்ற மனைவி உள்ளார். குழந்தை இல்லை.

    தற்போது இவர் டி.டி.வி. தினகரன் தலைமையில் இயங்கி வரும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் முகையூர் ஒன்றிய செயலாளராக இருந்து வந்தார்.

    சேவல் கோ.கோதண்ட ராமன் 1982-ம் ஆண்டு அ.தி.மு.க.வில் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி உறுப்பினராக சேர்ந்தார். 1988-89-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் முகையூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.

    அதன் பின்னர் 1993-ம் ஆண்டு முகையூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராக கோதண்டராமன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து கடந்த 2001-ம் ஆண்டு முகையூர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
    Next Story
    ×