என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொள்ளாச்சியில் பஸ் மீது தண்ணீர் லாரி மோதி விபத்து- 5 பேர் படுகாயம்
Byமாலை மலர்7 July 2018 11:06 AM GMT (Updated: 7 July 2018 11:06 AM GMT)
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இன்று காலை பஸ் மீது தண்ணீர் லாரி மோதிய விபத்தில் டிரைவர், கண்டக்டர் உள்பட 5 பேர் படுகாயமடைந்தனர்.
பொள்ளாச்சி:
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து இன்று காலை பெதப்பம்பட்டிக்கு அரசு பஸ் புறப்பட்டது. துர்க்கைராஜன் என்பவர் பஸ்சை ஓட்டினார். கண்டக்டராக கண்ணன் இருந்தார்.
அனுப்பர்பாளையம் பிரிவு மேடு அருகே பஸ் சென்றது. பஸ்சுக்கு முன்பு தண்ணீர் லாரி சென்றது. மேடு உயரமாக இருந்ததால் தொடர்ந்து தண்ணீர் லாரியால் செல்ல முடியாவில்லை. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி பின்நோக்கி வந்தது. லாரி பின்னால் வருவதை பார்த்த பஸ் டிரைவர் சுதாரித்துக்கொண்டு பஸ்சை நிறுத்தினார். இருந்தாலும் வேகமாக வந்த லாரி பஸ் மீது மோதியது. மோதிய வேகத்தில் பஸ் ஒரு பள்ளத்தில் ஒரு பக்கமாக கவிழ்ந்தது. அப்போதும் விடாமல் லாரி பஸ் மீது மோதியது.
இதில் பஸ்சில் இருந்த டிரைவர், கண்டக்டர் மற்றும் பயணிகள் அடிவெள்ளியை சேர்ந்த அமாவாசை (65), எரிப்பட்டியை சேர்ந்த கலைச்செல்வி (45), குணசேகரன் ஆகிய 5 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்த 5 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து இன்று காலை பெதப்பம்பட்டிக்கு அரசு பஸ் புறப்பட்டது. துர்க்கைராஜன் என்பவர் பஸ்சை ஓட்டினார். கண்டக்டராக கண்ணன் இருந்தார்.
அனுப்பர்பாளையம் பிரிவு மேடு அருகே பஸ் சென்றது. பஸ்சுக்கு முன்பு தண்ணீர் லாரி சென்றது. மேடு உயரமாக இருந்ததால் தொடர்ந்து தண்ணீர் லாரியால் செல்ல முடியாவில்லை. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி பின்நோக்கி வந்தது. லாரி பின்னால் வருவதை பார்த்த பஸ் டிரைவர் சுதாரித்துக்கொண்டு பஸ்சை நிறுத்தினார். இருந்தாலும் வேகமாக வந்த லாரி பஸ் மீது மோதியது. மோதிய வேகத்தில் பஸ் ஒரு பள்ளத்தில் ஒரு பக்கமாக கவிழ்ந்தது. அப்போதும் விடாமல் லாரி பஸ் மீது மோதியது.
இதில் பஸ்சில் இருந்த டிரைவர், கண்டக்டர் மற்றும் பயணிகள் அடிவெள்ளியை சேர்ந்த அமாவாசை (65), எரிப்பட்டியை சேர்ந்த கலைச்செல்வி (45), குணசேகரன் ஆகிய 5 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்த 5 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X