என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உடன்குடி அருகே பனையில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி
Byமாலை மலர்5 July 2018 5:23 PM GMT (Updated: 5 July 2018 5:23 PM GMT)
பனையில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உடன்குடி:
உடன்குடி அருகே உள்ள கொட்டங்காட்டை சேர்ந்தவர் பாக்கியராஜ். இவருக்கு சொந்தமான பனை மரங்கள் தீவத்தா புரம் என்ற இடத்தில் உள்ளன. இதில் இருந்து பதநீர் இறக்கி கருப்புக்கட்டி தயாரிக்கும் பணியில் குமரி மாவட்டம் தேங்காய் பட்டணத்தை சேர்ந்த பற்குணம் (வயது68). என்பவர் ஈடுபட்டிருந்தார். இதற்காக அவர் அப்பகுதியில் குடில் அமைத்து தங்கி இருந்தார்.
சம்பவத்தன்று இவர் பனை ஏறிய போது எதிர் பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். காயம் அடைந்த அவரை திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே பற்குணம் பரிதாபமாக இறந்தார்.
இது தொடர்பாக குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X