என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரக்கோணத்தில் மீண்டும் ரெயில் மறியல்- பொதுமக்களை தடியடி நடத்தி கலைத்தது போலீஸ்
Byமாலை மலர்4 July 2018 4:42 PM GMT (Updated: 4 July 2018 4:42 PM GMT)
அரக்கோணத்தில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர். #ArakkonamRailBlockade
அரக்கோணம்:
அரக்கோணம்- சென்னை வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார ரெயில்கள் தாமதமாக வருவதாக பயணிகள் தொடர்ந்து புகார் தெரிவித்தவண்ணம் உள்ளனர். சரிசெய்வதாக அதிகாரிகள் தரப்பில் உறுதி அளித்தபிறகும், ரெயில்கள் தாமதமாக வந்ததால் பயணிகள் போராட்டம் நடத்த தொடங்கி உள்ளனர்.
அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு நேற்று காலை 6.40 மணிக்கு புறப்பட வேண்டிய விரைவு மின்சார ரெயில் நீண்ட நேரமாக வராததால் ஆத்திரமடைந்த பயணிகள், சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அரக்கோணம் ரெயில் நிலைய அதிகாரிகள் மற்றும் போலீசார் பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். ரெயில் சரியான நேரத்தில் வந்து செல்லும் ரெயில்வே அதிகாரிகள் எழுத்து பூர்வமாக உறுதியளித்ததை அடுத்து மறியலை கைவிட்டனர்.
இந்நிலையில் இன்று சென்னையில் இருந்து வரும் மின்சார ரெயில் தாமதமானதால் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்தனர். அரக்கோணம் ரெயில் நிலையத்தில் காத்திருந்த நூற்றுக்கும் அதிகமான மக்கள், திடீரென ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கும் சூழல் ஏற்பட்டது.
அவர்களை கலைந்து செல்லும்படி போலீசார் கூறினர். ஆனால் கலைந்து செல்லவில்லை. இதையடுத்து லேசான தடியடி நடத்தி பொதுமக்களை கலைத்தனர். இந்த போராட்டம் காரணமாக அரக்கோணம் ரெயில் நிலைய வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. #ArakkonamRailBlockade
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X