search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை அருகே வீட்டின் கதவை உடைத்து நகை கொள்ளை
    X

    மதுரை அருகே வீட்டின் கதவை உடைத்து நகை கொள்ளை

    மதுரை அருகே வீட்டின் கதவை உடைத்து நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகமலை புதுக்கோட்டை:

    மதுரை அருகே உள்ள துவரிமான் இந்திரா காலனியை சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மகள் முருகேசுவரி (வயது25). அதே பகுதியில் உள்ள நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டார். இதை நோட்டமிட்ட மர்ம நபர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த 12 பவுன் நகையை திருடிக்கொண்டு தப்பினான்.

    இதுகுறித்த புகாரின் பேரில் நாகமலை புதுக்கோட்டை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    விசாரணையில் மதுரை அவனியாபுரம் எம்.எம்.சி. காலனியை சேர்ந்த முனியசாமி மனைவி சத்யா (30) நகையை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    Next Story
    ×