என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆரல்வாய்மொழி அருகே மனைவியுடன் தகராறில் தொழிலாளி தற்கொலை
Byமாலை மலர்15 Jun 2018 3:08 PM GMT (Updated: 15 Jun 2018 3:08 PM GMT)
குடிப்பதற்கு பணம் கொடுக்காததால் மனைவியுடன் தகராறில் ஈடுபட்ட தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆரல்வாய்மொழி:
ஆரல்வாய்மொழியை அடுத்த தாழக்குடி பார்வதி புதூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியபிள்ளை என்ற சண்முகம் (வயது 55) தொழிலாளி.
இவருக்கு மனைவி சிதம்பரம் மற்றும் பிள்ளைகள் உள்ளனர். பிள்ளைகளுக்கு திருமணம் முடிந்து வெளியூரில் உள்ளனர். கணவன் - மனைவி மட்டும் இங்கு வசித்து வருகின்றனர். சண்முகம் குடித்துவிட்டு சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனை மனைவி கண்டித்தார். மேலும் மனைவியிடம் குடிப்பதற்கு பணம் கேட்டு அதற்கு அவர் பணம் கொடுக்கவில்லை. இதனால் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். இதில் சண்முகம் மன வருத்தத்துடன் காணப்பட்டு வந்தார்.
இந்த நிலையில் மனைவி வீட்டில் இருந்து வெளியே சென்றிருந்தார். அப்போது சண்முகம் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். வீடு திரும்பிய மனைவி இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தார். சம்பவம் குறித்து ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி மற்றும் போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப் பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X