என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொள்ளாச்சி நிதி நிறுவன அதிபர் கொலையில் 2 பேர் சிக்கினர்
Byமாலை மலர்14 Jun 2018 11:33 AM GMT (Updated: 14 Jun 2018 11:33 AM GMT)
பொள்ளாச்சி நிதி நிறுவன அதிபர் கொலையில் 2 பேரிடம் தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி அருகே உள்ள வடுகபாளையம் மணிமேகலை வீதியை சேர்ந்தவர் கந்தசாமி (47) நிதி நிறுவன அதிபர். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் பொள்ளாச்சி அருகே உள்ள சிங்காநல்லூரில் புதரில் கந்தசாமி பிணமாக கிடந்தார். அவரது தலையில் வெட்டு காயம் இருந்தது. அவர் வெட்டி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
மேலும் அவர் அணிந்திருந்த செயின், சட்டை பையில் வைத்திருந்த பணம் ஆகியவை மாயமாகி இருந்தது. கந்தசாமியை கொலை செய்து விட்டு நகை, பணத்தையும் கொலையாளிகள் எடுத்து சென்றுள்ளனர். இது குறித்து ஆனைமலை போலீசில் புகார் செய்யப்பட்டது. கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கந்தசாமி கொலை தொடர்பாக பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த 2 பேரிடம் தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். சந்தேகத்தின் பேரில் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தனிப்படையினர் தெரிவித்தனர். #Tamilnews
பொள்ளாச்சி அருகே உள்ள வடுகபாளையம் மணிமேகலை வீதியை சேர்ந்தவர் கந்தசாமி (47) நிதி நிறுவன அதிபர். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் பொள்ளாச்சி அருகே உள்ள சிங்காநல்லூரில் புதரில் கந்தசாமி பிணமாக கிடந்தார். அவரது தலையில் வெட்டு காயம் இருந்தது. அவர் வெட்டி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
மேலும் அவர் அணிந்திருந்த செயின், சட்டை பையில் வைத்திருந்த பணம் ஆகியவை மாயமாகி இருந்தது. கந்தசாமியை கொலை செய்து விட்டு நகை, பணத்தையும் கொலையாளிகள் எடுத்து சென்றுள்ளனர். இது குறித்து ஆனைமலை போலீசில் புகார் செய்யப்பட்டது. கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கந்தசாமி கொலை தொடர்பாக பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த 2 பேரிடம் தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். சந்தேகத்தின் பேரில் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தனிப்படையினர் தெரிவித்தனர். #Tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X