search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொள்ளாச்சி நிதி நிறுவன அதிபர் கொலையில் 2 பேர் சிக்கினர்
    X

    பொள்ளாச்சி நிதி நிறுவன அதிபர் கொலையில் 2 பேர் சிக்கினர்

    பொள்ளாச்சி நிதி நிறுவன அதிபர் கொலையில் 2 பேரிடம் தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி அருகே உள்ள வடுகபாளையம் மணிமேகலை வீதியை சேர்ந்தவர் கந்தசாமி (47) நிதி நிறுவன அதிபர். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் பொள்ளாச்சி அருகே உள்ள சிங்காநல்லூரில் புதரில் கந்தசாமி பிணமாக கிடந்தார். அவரது தலையில் வெட்டு காயம் இருந்தது. அவர் வெட்டி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

    மேலும் அவர் அணிந்திருந்த செயின், சட்டை பையில் வைத்திருந்த பணம் ஆகியவை மாயமாகி இருந்தது. கந்தசாமியை கொலை செய்து விட்டு நகை, பணத்தையும் கொலையாளிகள் எடுத்து சென்றுள்ளனர். இது குறித்து ஆனைமலை போலீசில் புகார் செய்யப்பட்டது. கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கந்தசாமி கொலை தொடர்பாக பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த 2 பேரிடம் தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். சந்தேகத்தின் பேரில் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தனிப்படையினர் தெரிவித்தனர். #Tamilnews
    Next Story
    ×